ஹலால் சான்றிதழ் விநியோகத்தை ACJU வின் கட்டுப்பாட்டில் கொண்டு வாருங்கள்
ஹலால் சான்றிதழ் விநியோகம் தற்பொழுது தனியார் மயப்படுத்தப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரிந்த விடயம் இந்த நாசகார செயல் கடந்த அரசாங்கத்தில் அதாவது மஹிந்த ராஜபக்ஷ அரசில் பொதுபலசேனா அமைப்பால் வேண்டுமென்று ஜம்மியதுல் உலமாவிடம் இருந்து பிடுங்கி எடுக்கப்பட்டது.
அப்போதய அரசாங்கமும் உடந்தையாக இருந்ததும் எம் அனைவருக்கும் தெரியும். இதனை பிடுங்கி தனியார் மயப்படுத்த பொதுபலசேனா அமைப்பு பாரிய ஹலால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும் செய்திருந்தது.
முஸ்லிம் அமைப்புக்கள் இழந்தவற்றை பெற முயற்சி எடுக்க வேண்டும் அப்படியான ஒன்றுதான் இந்த ஹலால் சான்றிதழ் விநியோகமும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹத் ஏ.மஜீத்
பிரதம ஆசிரியர்