Headlines
Loading...
தீர்வின்றேல் பெப்.15 முதல் தொடர் வேலைநிறுத்தம்

தீர்வின்றேல் பெப்.15 முதல் தொடர் வேலைநிறுத்தம்



எம்.வை.அமீர் 

பல்கலைக்கழக ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள்,ஓய்வூதியம் மற்றும் ஏனைய பல விடயங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திக்கக்கோரி, அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனத்தின் தீர்மானத்துக்கு அமைய தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை பல்கலைக்கழக ஒலுவில் முற்றலில் மேற்கொண்டனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஊழியர் சங்கத்தலைவர் வை.முபாறக் தலைமையில் இடம்பெற்ற முழுநாள் அடையாள வேலைநிறுத்தத்தில், கருத்துத்தெரிவித்த முபாறக், பல்கலைக்கழக சகல தரங்களையும் உள்ளடக்கிய கல்விசாரா ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் கடந்த 2016 ஆம் ஆண்டு வாக்களிக்கப்பட்ட 460மில்லியன் பணத்தினூடாக ஜனவரி 31 க்கு முன்னர் தீர்க்கப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும், கல்விசாரா ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட தரப்புக்கள் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதுபோனால் எதிர்வரும் பெப்ரவரி 15 முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்க அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்க சம்மேளனம் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மாணவர்களின் கல்விநடவடிக்கைகளுக்கு ஊறுவிளைவிக்கும் மனோநிலை தாங்களிடம் இல்லை என்றும், கல்விசாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயப்பாடுகளை மாணவர்களும் புரிந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்த வை.முபாறக், நியாயமான தங்களின் கோரிக்களிகளை நிறைவேற்ற சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு கல்விசார், நிர்வாக உத்தியோகத்தர்களும் மற்றும் மாணவர்களும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

குறித்த அடையாள வேலைநிறுத்தத்தின்போது ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஏ.எம்.நஸ்வி உள்ளிட்ட அனைத்து கல்விசாரா ஊழியர்களும் பிரசன்னமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.