Headlines
Loading...
பிரதமர் ரணிலை சந்திக்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்!

பிரதமர் ரணிலை சந்திக்கிறார் அமைச்சர் ரவூப் ஹக்கீம்!


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறுபான்மை கட்சிகளுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.
எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில் நடைபெறவுள்ள குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, அகில இலங்கை தேசிய காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் பங்கேற்கவுள்ளன.
நீண்ட இழுபறிக்கு பின்னர் எல்லை மீள்நிர்ணய அறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.