Headlines
Loading...
முஸ்லிம் வர்த்தகர்கள் மீதுள்ள சமூக பொறுப்பு

முஸ்லிம் வர்த்தகர்கள் மீதுள்ள சமூக பொறுப்பு



தம்­புள்ளை நகரில் முஸ்லிம் வர்த்­தக நிலையம் ஒன்றில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வத்தை தொடர்ந்து அங்கு ஏற்­பட்ட பதற்ற நிலை நேற்று முதல் தணிந்­துள்­ள­துடன் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களும் மீளத் திறக்­கப்­பட்­டுள்­ளன.

சில தினங்­க­ளுக்கு முன்னர் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான உண­வகம் ஒன்­றி­லேயே இந்த விரும்­பத்­த­காத சம்­பவம் இடம்­பெற்­றி­ருந்­தது. இதன் கார­ண­மாக பெரும்­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கும் குறித்த உண­வ­கத்தை நடத்­து­வோ­ருக்­கு­மி­டையே கை கலப்பு இடம்­பெற்­ற­துடன் இருவர் காய­ம­டைந்­தனர். இத­னை­ய­டுத்து சம்­பந்­தப்­பட்ட இரு­வரும் பொலி­சா­ரினால் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஒரு சில வர்த்­த­கர்கள் தமது வாடிக்­கை­யா­ளர்­க­ளுடன் நடந்து கொள்ளும் முறை­யி­லுள்ள குறை­பா­டுகள் எவ்­வாறு ஒரு சமூ­கத்­தையே பாதிக்கும் என்­ப­தற்கு இந்த சம்­பவம் நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

ஒரு வர்த்­தக நிலை­யத்தைச் சேர்ந்­த­வரால் தோற்­று­விக்­கப்­பட்ட முரண்­பாடு கார­ண­மாக தம்­புள்ளை நகரில் வர்த்­த­கத்தில் ஈடு­படும் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான சுமார் 100 வர்த்­தக நிலை­யங்­களை முன்று தினங்­க­ளுக்கும் மேலாக மூட வேண்­டிய நிலை ஏற்­பட்­டமை துர­திஷ்­ட­வ­ச­மா­ன­தாகும்.

அத்­துடன் இன­வாத சக்­திகள் இதனை வாய்ப்­பாக பயன்­ப­டுத்தி தம்­புள்ளை நகரில் முஸ்­லிம்­களின் வியா­பார நிலை­யங்­களை நிரந்­த­ர­மாக அகற்­று­வ­தற்­கான காய்­ந­கர்த்­தல்­க­ளையும் முன்­னெ­டுத்­தனர். எனினும் அதே நகரில் வாழ்­கின்ற இன நல்­லு­றவை விரும்­பு­கின்ற பெரும்­பான்மை மக்­களின் ஆத­ரவால் இன­வா­தி­களின் நோக்­கங்கள் முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளமை மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தாகும்.

தம்­புள்­ளைதான் இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மேலெ­ழுந்த இன­வா­தத்தின் மையப் புள்­ளி­யாகும். அங்கு இன்­னமும் இன­வாதம் மையம் கொண்டுள்ளது.

எவ்வாறேனும் தம்புள்ளை பள்ளிவாசலை அகற்றிவிட வேண்டும் என அவர்கள் கங்கணம் கட்டிச் செயற்படுகின்றனர். இதற்கான வழிகளை திறந்து கொடுக்கும் வகையில் எமது செயற்பாடுகள் அமைந்துவிடக் கூடாது.

-பைறுாஸ்