Headlines
Loading...
இறக்காம முஸ்லிம்களுக்கு வந்த சோதனை; கட்டிடம் கட்ட முடியாது

இறக்காம முஸ்லிம்களுக்கு வந்த சோதனை; கட்டிடம் கட்ட முடியாது

-ரீ.கே.றஹ்­மத்­துல்லா -

இறக்­காமம் பிர­தேச செய­லாளர் பிரி­வுக்கு உட்­பட்ட  மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலைக்கு அரு­கி­லுள்ள சில காணி­களில் அபி­வி­ருத்தி வேலை­களில் ஈடு­ப­டு­வ­தற்குப் பிர­தேச செய­ல­கத்தால் தடை உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பி­ர­தேச செய­லாளர் எம்.எம்.நஸீர் தெரி­வித்தார். 



மேற்­படி காணி­களின் உத்­த­ர­வுப்­பத்­தி­ரங்கள் மற்றும் அக்­கா­ணிகள் தொடர்­பான ஆவ­ணங்­களைப் பரி­சீ­லிக்க வேண்­டி­யுள்­ளது. ஆகவே, மாகாணக் காணி ஆணை­யா­ளரின் மறு அறி­வித்தல் கிடைக்கும் வரையில் அக்­கா­ணி­களில் கட்­டடம் அமைப்­பது, வேறு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வது உள்­ளிட்ட எந்­த­வித அபி­வி­ருத்தி வேலை­க­ளையும் மேற்­கொள்ள வேண்டாம் என்­ப­துடன் அக்­கா­ணி­க­ளுக்குள் நுழைய வேண்டாம் எனவும் அக்­கா­ணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்குக்  கடிதம் மூலம் தனித்­த­னி­யாக  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இறக்­காமம் பிர­தேச செய­ல­கத்­திற்­குட்­பட்ட இக்­கா­ணிகள் என்ற வகையில் மாகாணக் காணி ஆணை­யா­ள­ரினால் தமக்கு பணிப்­புரை வழங்­கப்­பட்­ட­மைக்கு அமை­யவே இது தொடர்பில் மேற்­படி காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு  அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

மாணிக்­க­மடு புத்தர் சிலை வைப்பு தொடர்­பான வழக்கு  நீதி­மன்­றத்தில் இடம்­பெற்று வரு­கின்ற நிலையில் சிலை வைக்­கப்­பட்­டுள்ள மலைப் பிர­தே­சத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள காணிச் சொந்­தக்­கா­ரர்கள் காணி­க­ளுக்கு செல்­வ­தற்­கான தடை மாகாணக் காணி ஆணை­யா­ளரின் பணிப்­பு­ரைக்கு அமைய பிர­தேச செய­லா­ள­ரினால் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

இதே­வேளை சிலை வைக்­கப்­பட்­டுள்ள பிர­தே­சத்தில் பௌத்த முக்­கிய தினங்களில் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதுடன் அப்பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளும் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்றுவருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.