Headlines
Loading...
தம்புள்ளவில் ஒரு இனாவாதமுமில்லை; மக்களை குழப்ப வேண்டாம்

தம்புள்ளவில் ஒரு இனாவாதமுமில்லை; மக்களை குழப்ப வேண்டாம்



சஸ்னி அல்தாப்

தம்புள்ளை நகரத்தில் பதற்ற நிலையென்னு முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இணைய ஊடங்கள் செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றது.

தயவு செய்து தனிப்பட்டவர்களின் பிரச்சினைகளை இனவாதமாக சித்தரித்து பகுதி முஸ்லிம்களின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும், எங்கள் மீதான நல்லெண்ணத்தையும் சீர்குலைத்து விடாதீர்கள். 

இணையத்தளங்கள் மூலம் ஒரு சிறு பிரச்சினைகள் நடந்தாலும் பூதாகரப்படுத்துவது வழமையாக போய்விட்டது, தயவு செய்து உங்கள் RANK ஐ அதிகரிக்க முஸ்லிம்களின் சுதந்திரத்தோடு விளையாடாதீர்கள்.