Headlines
Loading...
முஸ்லிம் சிறார்களுக்கு இஸ்லாத்தை கற்பிப்பதற்கான உத்திகள்

முஸ்லிம் சிறார்களுக்கு இஸ்லாத்தை கற்பிப்பதற்கான உத்திகள்



இவ்­வாய்­வுக்­கட்­டு­ரை­யா­னது பல பகு­தி­களைக் கொண்­ட­தாகும். இது இலங்­கையில் சிறு­வர்­க­ளுக்கு இஸ்­லாத்தை கற்­பிக்கும் அனைத்து ஆசி­ரி­யர்­க­ளுக்கும் பய­னுள்ள ஆய்­வாக இருக்கும் என நாம் எதிர்­பார்க்­கிறோம். அந்த வகையில் இன்ஷா அல்லாஹ் வாராந்தம் வியா­ழக்­கி­ழமை தோறும் தொடர் கட்­டு­ரை­யாக இதனை வெளி­யி­ட­வுள்ளோம். 
முன்­னுரை 
21 ஆம் நூற்­றாண்டு கல்­வியின் ஒவ்­வொரு துறையும் நன்கு வளர்ச்­சி­ய­டைந்து வரும் காலப்­ப­கு­தி­யாகும். குறிப்­பாக சிறு­வர்­க­ளுக்­கான கல்விப் போத­னை­ பல்­வேறு முன்­னேற்­றங்­களை கண்டு வரு­கின்­றது. இருந்த போதிலும், இலங்­கையில் இஸ்­லா­மியக் கல்விப் போதனை முறை­ சிறு­வர்­க­ளுக்கு மத்­தியில் எவ்­வித முன்­னேற்­றங்­களுமின்றி பாரம்­ப­ரிய போதனை முறை­மை­களைப் பின்­பற்­றியே பெரும்­பா­லான இடங்­களில் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

இலங்கை சிறார்­க­ளுக்கு இஸ்­லா­மியக் கல்­வியை வழங்­கு­வதில் வீடு, அர­சாங்கப் பாட­சாலை மற்றும் முன்­பள்ளிப் பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­படும் இஸ்லாம் பாடம், அல்­குர்ஆன் மத்­ரஸா, அஹ­திய்யாப் பாட­சாலை, இஸ்­லா­மிய நிறு­வ­னங்கள், இயக்­கங்கள் என்­ப­வற்றின் சிறுவர் பிரி­வுகள் போன்­றவை பங்­காற்றி வரு­கின்­றன. எனினும் இவற்றில் அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­களே பிர­தான பங்­கினை வகிக்­கின்­றன.

இந்த அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் ஆரம்ப காலம் தொட்டு பின்­பற்­றப்­பட்ட பாரம்­ப­ரிய கலைத்­திட்­டமும், ஒழுங்­க­மைக்­கப்­ப­டாத கல்விப் போதனா முறை­யும்தான் இன்­று­வரை பின்­பற்­றப்­பட்டு வரு­கின்­றன. தற்­போது இலங்­கையில் சுமார் 4000 இற்கும் மேற்­பட்ட அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்கள் இயங்கி வரு­கின்­றன.

அப்­ப­டிப்­பட்ட பாரம்­ப­ரிய அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளினால் எமது இளம் சிறார்­களை கவர முடி­ய­வில்லை. அவர்­களின் விருப்­பு­க­ளுக்கு இடம்­கொ­டுக்­கவும் முடி­ய­வில்லை.

இதனால் காலம் கால­மாக அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்கள் வெறு­மனே அல்­குர்­ஆனை நெட்­டு­ருப்­பண்ணும் ஒரு சந்­த­தி­யி­ன­ரையே உரு­வாக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன. தொழி­நுட்ப, விஞ்­ஞான மற்றும் உள­வியல் துறை­களின் வளர்ச்­சியின் உச்ச கட்­டத்தில் நிற்கும் சம­கால சமூக தளத்தில் நமது பாரம்­ப­ரிய மத்­ரஸாக் கல்விமுறை தோற்றுப்போய்­விட்­டது என்­பது கவ­லைக்­கி­ட­மான உண்­மை­யாகும்.

எனினும், அண்மைக் கால­மாக இலங்­கையில் ஆங்­காங்கே அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளுக்­கான புதிய வேலைத்­திட்­டங்கள்  (Syllabus) அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

இலங்­கையில் இயங்கும் பிர­தான இஸ்லாமிய தஃவா அமைப்­பு­களின் வழி­காட்­டலின் கீழ் சில நவீன பாடத்­திட்­டங்கள் தயா­ரிக்­கப்­பட்டு ஆங்­காங்கே சில நவீன அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்கள் நடாத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இந்த மத்­ர­ஸாக்­க­ளிலும் கூட நவீன கலைத்­திட்டம் வடி­வ­மைக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அவற்றைக் கற்­பிப்­ப­தற்­கான ஒரு சில கற்­பித்தல் உத்­தி­களே பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால் இன்று சர்­வ­தேச ரீதியில் கற்­பித்­தல்­துறை என்­பது பல முக்­கி­ய­மான மைல் கற்­களைத் தாண்டிச் சென்று கொண்­டி­ருக்­கி­றது. எனவே, அப்­ப­டி­யான கற்­பித்தல் உத்­தி­களை இந்த அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­களில் கற்­பிக்­கின்ற ஆசி­ரி­யர்கள் அறிந்து அவற்றைப் பயன்­ப­டுத்­து­கின்ற போதுதான் உத்­வே­க­மிக்க, உன்­னத சிறுவர் சமு­தா­ய­மொன்றை கட்­டி­யெ­ழுப்ப முடி­யு­மாக இருக்கும்.

மேலும், மிக அண்­மையில் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­தினால் முன்­வைக்­கப்­பட்ட முழு இலங்­கைக்­கு­மான அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­க­ளுக்­கான பாடத்­திட்­டமும் 2012 ம் ஆண்டு ஜம்­இய்­யதுல் உல­மா­வினால் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மக்தப் பாடத்­திட்­டமும் அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­களின் வர­லாற்றில் முக்­கிய திருப்­பு­மு­னை­க­ளாகும்.

எனினும் அந்தப் பாடத்­தி­ட்டங்­க­ளிலும் கூட கற்­பித்தல் உத்­திகள் குறித்த மாண­வர்­களின் உள­வியல் தன்­மை­களுக்கேற்ப அப்­பா­டத்­திட்­டத்தை கற்­பித்து அமுல்­ப­டுத்­து­வ­தற்­கேற்ற வழி­மு­றைகள் விரி­வாகக் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை.

எனவே இலங்­கையில் சிறார்­க­ளுக்கு இஸ்­லாத்தைக் கற்­பிக்கும் ஆசி­ரி­யர்கள் விசே­ட­மான பயிற்­று­விப்­புக்கு உட்­ப­டுத்த வேண்­டிய தேவை இருக்­கி­றது. அதே­நேரம் இந்த ஆசி­ரி­யர்­க­ளுக்­கான கற்­பித்தல் உத்­திகள், மாண­வர்­களின் உள­வியல் பாங்­குக்­கேற்ப கற்­பிக்கக் கூடிய கற்­பித்தல் வழி­மு­றைகள் என்­பன அடங்­கிய ஒரு வழி­காட்டல் நூல் இது­வரை இலங்­கையில் வெளி­யி­டப்­ப­ட­வில்லை என்­பது ஈண்டு குறிப்­பி­டத்­தக்­க­தாகும். 

அதே­போன்று அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்கள் தவிர சிறு­வர்­க­ளுக்கு இஸ்­லாத்தைப் போதிக்­கின்ற மற்­று­மொரு இட­மாக முன்­பள்­ளிகள் (Pre School)  மற்றும் அரச பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­படும் இஸ்லாம் பாடத்தைக் குறிப்­பிட முடியும். அதேபோல் ஞாயிற்றுக் கிழ­மை­களில் முஸ்லிம் பிர­தே­சங்கள் சில­வற்றில் நடை­பெறும் அஹ­திய்யா பாட­சா­லை­களும் இத்­து­றையில் கணி­ச­மாகப் பங்­காற்­று­கின்­றன. இலங்­கையில் சுமார் 500 இற்கும் அதி­க­மான அஹ­திய்­யாக்கள் நடை­பெ­று­கின்­றன.

இது­த­விர இஸ்­லா­மிய இயக்­கங்கள், அமைப்­புக்­களின் கீழி­யங்கும் சிறுவர் பிரி­வு­க­ளிலும் வாரா­வாரம் சில இஸ்­லா­மிய வகுப்­பு­களின் மூலம் இஸ்லாம் கற்­பிக்­கப்­ப­டு­கி­றது.

இவை அனைத்­திற்கும் மேலாக ஒவ்­வொரு சிறு­வர்கள் வாழும் வீட்­டிலும் பெற்றோர், பாது­கா­வ­லர்­களால் இஸ்லாம் ஓர­ளவு கற்­பிக்­கப்­ப­டு­கி­றது. எனினும் மேற்­கூ­றப்­பட்ட அனைத்து இடங்­க­ளிலும் கற்­பிப்­ப­தற்­கான கலைத்­திட்டம் (Syllabus),  கற்­பித்தல் சாத­னங்கள் (Teaching Materials) என்­பன காணப்­பட்­டாலும் வித்­தி­யா­ச­மான, சுவா­ரஷ்­ய­மான. நவீ­ன­மான கற்­பித்தல் உத்­திகள் பயன்­ப­டுத்­தப்­ப­டாமை, அதுபற்­றிய தெளிவு இல்­லாமை போன்ற கார­ணங்­களால் சிறார்­க­ளுக்கு இஸ்­லாத்தைக் கற்­பித்தல் என்­பது இலங்­கையைப் பொறுத்­த­வரை இன்னும் அடைய வேண்­டிய அடை­வு­களை அடை­ய­வில்லை. இன்னும் தாண்ட வேண்­டிய மைல்­கற்கள் நிறை­யவே இருக்­கின்­றன. 

சுருக்­க­மாக நோக்­கினால் மேற்­கூ­றப்­பட்ட அனைத்து இடங்­க­ளிலும் கற்­பிக்­கப்­படும் இஸ்லாம் பாடத்­தினை ஒரு சில தலைப்­பு­க­ளுக்குள் அடக்­கி­விட முடியும்.

அல்­குர்ஆன், அல்­ஹதீஸ், பிக்ஹ், ஸீரா என ஒவ்­வொரு பாடத்­தையும் கற்­பிப்­ப­தற்கு வித்­தி­யா­ச­மான, சுவா­ரஷ்­ய­மான பல வழி­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. எனவே, அப்­ப­டி­யான கற்­பித்தல் உத்­தி­களை இலங்­கையில் இஸ்­லாத்தைக் கற்­பிக்கும் அனைத்து ஆசி­ரிய ஆசி­ரி­யை­க­ளுக்கும் கிடைக்கச் செய்ய வேண்­டிய தேவை இருக்­கி­றது.

மேலும் இஸ்லாம், இஸ்லாம் பாடத்­தைக கற்­பிப்­பதை எப்­படி வர­வேற்­றி­ருக்­கி­றது, இஸ்­லாத்தைக் கற்­பிப்­போ­ருக்­கான வெகு­ம­திகள், இஸ்­லாத்தைக் கற்­பிப்­ப­தற்கு நபி (ஸல்) அவர்கள் கையாண்ட  கற்­பித்தல் உத்­திகள், மாண­வர்­களின் கற்றல் பாங்கு, உள­நிலை என்­ப­வற்­றுக்­கேற்ற கற்­பித்தல் வழி­மு­றைகள், இஸ்­லாத்தின் ஒவ்­வொரு அல­கு­க­ளையும் கற்­பிப்­ப­தற்குப் பின்­னா­லுள்ள இலக்­குகள், நடத்தை மாற்­றங்கள் என்­ப­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்ட கற்­பித்தல் முறைமை என்­ப­வற்றை ஒவ்­வொரு ஆசி­ரி­யரும் புரிந்துகொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

அந்த வகையில் மேற்­கூ­றப்­பட்ட விட­யங்­களை அல்­குர்ஆன், ஸுன்னா, உள­வியல் அடிப்­ப­டையில் விளக்­கு­கின்ற ஓர் ஆய்­வாக இவ்­வாய்வு அமைந்­தி­ருக்­கி­றது. அல்­ஹம்­து­லில்லாஹ்.

ஏற்­க­னவே இலங்கை முஸ்லிம் சமூ­கத்தில்  குழந்தை வளர்ப்பு (தர்­பிய்­யதுல் அவ்­லாத்) சம்­பந்­த­மா­கவும் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அதேபோல் அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்­களை நவீ­ன­ம­யப்­ப­டுத்­து­வது தொடர்­பான சில ஆய்­வு­களும் வெளி­வந்­துள்­ளன.  ஆனால் இவ்­வாய்­வு­களில் கற்­பித்தல் உத்­திகள்; குறித்து விரி­வாக ஆரா­யப்­ப­ட­வில்லை.

அற­பு­மொ­ழியில் கற்­பித்தல் உத்­திகள் சம்­பந்­த­மான பொது­வான பல நூல்கள் காணப்­பட்­டாலும் இலங்கைச் சூழலை அடிப்­ப­டை­யாகக் கொண்டு  சிறார்­க­ளுக்கு இஸ்­லாத்தைக் கற்­பிப்­ப­தற்­கான கற்­பித்தல் உத்­திகள் குறித்த ஆய்வின் தேவை உண­ரப்­பட்­டுள்­ளது. 
 
இந்த ஆய்வின் நோக்கம்
மனித வாழ்வின் விருத்திப் பரு­வங்­களில் முதன்­மை­யான பருவம் சிறுவர் பரு­வ­மாகும். எனவே, சிறு­வர்­க­ளுக்­கான இஸ்­லா­மிய கல்விப் போதனை வள­மிக்­க­தா­கவும், வலு­வு­டை­ய­தா­கவும் கட்­டி­யெ­ழுப்­பா­து­விடின் அச்­சி­றார்­களின் இடை­நிலைக் கல்வி, உயர்­கல்வி என்­ப­வற்றின் போதும் இஸ்லாம் அவர்­களில் தாக்கம் செலுத்­தாது போகும்.

எனவே, சிறு­வர்­களின் உடல், உள, சமூக, பண்­பாட்டு விருத்திக் கோலங்­களும் அவற்­றோடு இடை­வினை கொள்ளக் கூடிய கற்­பித்தல் உத்­தி­களும் சிறுவர் கற்­பித்­தலில் பயன்­ப­டுத்த வேண்டும். “Development Disorder”  எனும் விருத்தி நிலை ஒழுங்குக் குலைவு ஏற்­ப­டா­வண்ணம் கற்­பிப்­ப­தற்­கான கற்­பித்தல் வழி­மு­றைகள் உப­யோ­கிக்­கப்­பட வேண்டும்.

  வெறு­மனே ஒரு கலைத்­திட்­டத்தின் வெற்றி என்­பது பாடப்­ப­ரப்­பு­க­ளோடு சுருங்­கி­வி­டு­வ­தில்லை. மாறாக சிறுவர் உள­வியல், கலைத்­திட்ட விருத்தி, கற்­பித்­த­லியல் நுட்­ப­வி­யல்கள், வள ஆக்­கங்கள், புலப்­பா­டு­களின் கணிப்­பீ­டுகள், ஆசி­ரி­யத்­துவ வாண்மை போன்ற விட­யங்­க­ளிலும் தங்­கி­யுள்­ளன.

எனவே எதிர்­கா­லத்தில் இஸ்­லாத்தை வெறு­மனே மன­ன­மிட்ட ஒரு சந்­த­தி­யன்றி தமது அன்­றாட வாழ்வில் இஸ்­லாத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­கின்ற ஓர் உய­ரிய சிறுவர் சமு­தாயம் ஒன்றை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­கான ஓர் அடித்­த­ளத்தை அமைப்­பதே இவ்­வாய்வின் பிர­தான நோக்­க­மாகும். இவை­த­விர இன்னும் சில கிளை நோக்­கங்­க­ளையும் இவ்­வாய்வு கொண்­டுள்­ளது.

இஸ்லாம் பாடத்தைக் கற்­பிப்­பதன் அவ­சி­யத்­தையும் இஸ்லாம் பாடத்தைக் கற்­பிப்­பதன் சிறப்­பு­க­ளையும் முஅல்லிம் முஅல்­லி­மாக்­க­ளுக்கு உணர்த்­துதல்.

கற்­பிப்­பது வெறு­மனே ஒரு தொழில் என்­ப­தற்கு அப்பால் அது ஓர் உயர்ந்த சமூ­கப்­பணி என்­பதை நிறு­வுதல்.

இஸ்­லாத்தைக் கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான முன்­மா­தி­ரி­யாக நபி (ஸல்) அவர்கள் கையாண்ட கற்­பித்தல் உத்­தி­க­ளையும், அவர்­களின் வழி­காட்­டல்­க­ளையும் அறி­மு­கப்­ப­டுத்தல்.

Facilitative Teaching எனும் புதிய கல்விக் கொள்­கையை இஸ்­லாத்தைக் கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு, குறிப்­பாக அல்­குர்ஆன் மத்­ரஸா முஅல்­லிம்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்தல்.

இது­வரை நடை­மு­றை­யி­லி­ருக்கும் பாரம்­ப­ரிய மற்றும் நவீன கற்­பித்தல் உத்­தி­களைக் கண்­ட­றிந்து அதனைப் பட்­டி­யற்­ப­டுத்தி அதி­லுள்ள சாதக பாத­கங்­களைக் கண்­ட­றிதல்.

மாண­வர்­களின் கற்றல் பாங்கு, கற்கும் விதம், கற்கும் இயல்பு என்­ப­வற்றை ஆசி­ரி­யர்­க­ளுக்கு அறி­முகம் செய்து அதற்­கேற்ப மாண­வர்­களை உள­வியல் ரீதி­யாக அணு­கு­வ­தற்­கான வழி­காட்­டல்­களை வழங்­குதல்.

இஸ்லாம் பாடத்தின் ஒவ்­வொரு அல­கையும் அதி­லுள்ள கிளை அல­கு­க­ளையும் கற்­பிப்­ப­தற்­கான கற்­பித்தல் உத்­தி­களை அறி­முகம் செய்தல்.
ஆய்வுப் பரப்பும் அதன் எல்­லையும்
இவ்­வாய்­வா­னது இலங்­கையில் முஸ்லிம் சிறார்­க­ளுக்கு இஸ்­லாத்தைக் கற்­பிப்­ப­தற்­கான கற்­பித்தல் உத்­திகள் என்ற பொதுத் தலைப்பில் அமைந்­தி­ருந்­தாலும் வெறு­மனே கற்­பித்தல் உத்­தி­களை மட்டும் இவ்­வாய்வு உள்­ள­டக்­காது. மாறாக அத­னோடு தொடர்­பு­டைய 5 அம்­சங்­களை ஆய்வுப் பரப்­பாகக் கொண்­டுள்­ளது.

ஆரம்­பத்தில் கற்­பித்தல், கற்­பித்தல் உத்­திகள், Facilitative Teaching போன்ற பதப் பிர­யோ­கங்­களை அறி­முகம் செய்­வ­தாக இவ்­வாய்வு அமைந்­துள்­ளது.

அதனைத் தொடர்ந்து இஸ்­லாத்தைக் கற்­பிப்­பதன் அவ­சியம், அத­னது சிறப்­புகள், கற்­பித்­தலில் நபி­ய­வர்­களின் வழி­காட்­டல்கள், ஆளுமை உரு­வாக்­கத்தில் ஆசி­ரி­யர்­களின் பங்­க­ளிப்­புக்­கான சில உதா­ர­ணங்கள் என்­ப­வற்றை விளக்­கு­வ­தாக இப்­ப­குதி அமைந்­தி­ருக்கும்.
அடுத்த பகு­தியில் மாண­வர்­களின் கற்கும் திறன், கற்கும் விதங்கள் தொடர்­பான உள­வியல் ஆய்­வொன்று முன்­வைக்­கப்­பட்டு அந்த மாண­வர்­களின் உளப்­பாங்­குக்கு ஏற்ற கற்­பித்தல் உத்­தி­களை பயன்­ப­டுத்­து­வதன் அவ­சி­யமும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அடுத்த பகுதி கற்­பித்தல் சாத­னங்கள். கற்­பித்தல் உத்­திகள், நபி­ய­வர்கள் கையாண்ட கற்­பித்தல் உத்­திகள், ஆசி­ரி­யரின் பண்­புகள் குறித்து பேசு­கி­றது.

ஐந்தாம் பகு­தியே ஆய்வின் முக்­கி­ய­மான பகு­தி­யாகும். இப்­ப­கு­தியில் இஸ்லாம் பாடம் என்ற பொது­வான தலைப்­புக்குள் உள்­ள­டங்கும் கிளை அல­குகள் ஒவ்­வொன்­றையும் தனி­யாக எடுத்து அவை ஒவ்­வொன்­றையும் கற்­பிப்­ப­தற்­கான கற்­பித்தல் உத்­திகள், அவற்றைக் கற்­பிப்­ப­த­னூ­டாக எதிர்­பார்க்­கப்­படும் உள, நடத்தை ரீதி­யான இலக்­குகள் என்­ப­வற்­றையும் ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.
ஆய்வுப் பிரச்­சினை
இன்­றைய இலங்­கையில் சுமார் 4000 அல்­குர்ஆன் மத்­ர­ஸாக்கள், 500 அஹ­தி­ய்யாக்கள் என்­பன இயங்கி வந்த போதிலும் அவற்­றினால் சிறு­வர்­க­ளுக்­கான போதிய கல்விப் போத­னைகள் சென்­ற­டை­ய­வில்லை. அதற்குப் பிர­தான காரணம், மரபு ரீதி­யான கற்­பித்தல் உத்­தி­களே அங்கு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாகும்.

மேலும் நவீன தொடர்­பாடல் சாத­னங்­களும், தொழி­நுட்ப வச­தி­களும் அதி­க­ரித்­துள்ள சம­கால சூழலில் சிறு­வர்­களைக் கவரும் வகையில் பாடத்­திட்டம் கற்­பிக்­கப்­ப­டா­துள்­ளன. எனவே இஸ்லாம் பாடம் ஒரு புறக்­க­ணிக்­கப்­பட்ட பாட­மாக மாறி­யுள்­ளது. கற்­பிக்கும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு இஸ்லாம் பாடத்தை நவீன தொடர்­பாடல், தொழி­நுட்ப வச­தி­களைப் பயன்படுத்தி எப்படிக் கற்பிக்கலாம் என்பது பற்றிய தெளிவின்மை காணப்படுகின்றது.

கற்பித்தலின் போது நபியவர்கள் காட்டித் தந்த சிறந்த கற்பித்தல் நுட்ப முறைகளும், கற்பித்தல் ரீதியான வழிகாட்டல்களும் கவனத்திற் கொள்ளப்படாதுள்ளன.

கற்பித்தலின் போது சிறார்களின் தனிநபர் வேறுபாடுகள், கற்கும் விதம், உளப்பாங்கு போன்ற உளவியல் அணுகுமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அதாவது, எல்லா மாணவர்களுக்கும் ஒரே விதமான கற்பித்தல் உத்திகளே பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மெல்லக் கற்கும் மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

அத்துடன் ஆங்கிலம், கணினி வகுப்புகளில் நவீன மயப்படுத்தலால் கவரப்பட்டுள்ள சிறுவர்களை பாரம்பரிய மத்ரஸாக்கள், அஹதிய்யாக்களால் அவற்றுக்கு நிகராகக் கவரமுடியாமல் போயுள்ளது.

வீடுகளில் பெற்றோர்கள் இஸ்லாத்தைக் கற்பிக்கும் போது குழந்தைகளுக்கேற்ற வகையில் அவற்றை எவ்வாறு கற்பிப்பது என்பது பற்றிய தெளிவு பெற்றோருக்கு இல்லாமலிருக்கிறது.

சில நவீன குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் இஸ்லாமிய நிறுவனங்களில் ஒழுங்குபடுத்தப்பட்ட கலைத்திட்டம், நவீன கற்பித்தல் சாதனங்கள் என்பன இருந்த போதும் அவற்றைக் கற்பிக்கும் ஆசிரிய ஆசிரியைகள் நவீன கற்பித்தல் உத்திகள் பற்றிய தெளிவின்மையாலும் அது குறித்த தொடர்ச்சியான வழிகாட்டல் கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் என்பவற்றின் மீது தங்கி நிற்க வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே, மேற்குறித்த குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில்தான் இவ்வாய்வு எழுதப்பட்டுள்ளது.  
அல்லாஹ் எம் அனைவரினதும் தூய பணிகளை ஏற்றுக் கொள்வானாக.