Headlines
Loading...
காத்தான்குடி மோதல் ; 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

காத்தான்குடி மோதல் ; 10 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு


Ceylon Muslim Special Correspondent 

காத்தான்குடியில் தவ்ஹீத் மற்றும் தரீக்கா சார்பு குழுக்களிடையே கடந்த 10.03.207 அன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைதான 10 பேரையும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.கணேசராசா இன்று உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடியைத் தளமாகக் கொண்ட தேசிய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கும் அவ்வூரில் இயங்கும் மௌலவி அப்துர் ரவூப் ஆதரவாளர்களுக்குமிடையில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில் மூவர் காயமடைந்ததுடன் இதனுடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டு இன்று 24.03.2017 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் 8 பேரும் மௌலவி அப்துர் ரவூப் தரப்பில் 2 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.