Headlines
Loading...
பேராசிரியா் ம.மு.உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு; கொழும்பில் நிகழ்வு

பேராசிரியா் ம.மு.உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு; கொழும்பில் நிகழ்வு

அஷ்றப். ஏ சமத்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில்  காலம் சென்ற பேராசிரியா் ம.மு.உவைஸ் அவா்களின் நினைவுக் கருத்தரங்கு  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின்  கல்கிசையில்  உள்ள  கற்கை நிலையத்தில் இன்ற ஞாயிறு(26) காலை -09.00 -04.30 மணிவரை நடைபெற்றது.  இந் நிகழ்வுகளின் அங்குராப்பண அரங்கில்   பேராசிரியர் றமீஸ் அப்துல்லா தலைமையில் இடம் பெற்றது.  இந் நிகழ்வில்  தென்கிகிழக்கு உபவேந்தா் பேராசிரியா்  எம்.எம். நாஜிம்  தொடக்கவுரையை நிகழ்த்தினாா்.  வாழ்த்துறையை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை, கலாச்சார துறை அதிபதி - எம்.எல். பௌசுல் அமீா்,  அத்துடன் தமிழ்நாடு சட்டசபை உறுப்பிணா்  குத்துாஸ் ஹசனும் உரை நிகழ்த்தினாா்கள்.

ஞாபகாா்த்த சின்னம் போராசிரியரின் முத்த புதல்வரிடம் உபவேந்தரினால் வழங்கப்பட்டது. அத்துடன் ஏனைய புதல்வா்கள், புதல்வியும் கலந்து கொண்டனா்.

மையப்பொருள் உரையை பேராசிரியா் எம்.ஏ.நுஹ்மான், கருத்தரங்கின் 11 ம் நிகழ்வுக்கு பேராசிரியா் எஸ். தில்லைநாதன் தலைமையில் நடைபெற்றது.  பேராசிரியா் பே.யோகராஜா இஸ்லாமிய தமிழ் இலங்கிய வரலாறு எனற தலைப்பில் உரை நிகழ்த்தினாா்.  கருத்தரங்கின் 111 ஜாமியா நளீமியா பணிப்பாளா் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி தலைமையில் நடைபெற்றது.     இஸ்லாமிய தமிழ் இலக்கிய உரையை பேராசிரியா அ. சன்முகதாஸ்  இஸ்லாமிய தமிழ்  இலக்கிய ஆய்வுரையை ஜாமிய நளிமீயா முதல் நிலை விரிவுரையாளா்  அஷ்ஷேக் எஸ்.ஏ. பழில் பேராசிரியா் எம். ஏ அனஸ்,   உரைநிகழ்த்தினாா்கள்.
 

பேராசிரியா் பற்றிய  நுால் வெளியீடு  பேராரிசிரியா் எம். ஏ நுஹ்மனா், பேராசிரியா் தில்லைநாதன் ஆகியோா் தலைமையில நடைபெற்றது. நுாலின் பிரதிகளும் பேராசிரியரின் குடும்ப அங்கத்தவா்களிடம் கையளிக்கப்பட்டன.  கலாநிதி அ. இரகுபரன்  அறிமுக உரை  பேராசிரியா் வ. மகேஷ்வரன், நிகழ்த்தினாா்கள் 

இந் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ மாணவிகள், பேராசிரியா்கள் பேராசிரியா் உவைசின் குடும்ப அங்கத்தவா்கள்.  இலக்கியவாதிகள் எழுத்தாளா்கள், ஊடகவியலாளா்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனா்.