Headlines
Loading...
முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை; ரிஸ்வி முப்தி

முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றவேண்டிய அவசியமில்லை; ரிஸ்வி முப்தி

உலமாசபை தலைவர் ரிஸ்வி முப்தி


முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் தேவையில்லை முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் அந்தக் காலத்தில் சரி­யா­கவே எழு­தப்­பட்­டுள்­ளது. 

அந்தச் சட்ட வரைபு சிறப்­பாக வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. இந்தச் சட்­டத்தில் மாற்­றங்கள் தேவை­யில்லை. சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் விட­யத்­திலே கட்­டுப்­பா­டுகள் கொண்டு வரப்­பட வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ரிஸ்வி முப்தி தெரி­வித்தார்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள முன்னாள் உயர் நீதி­மன்ற நீதி­ய­ரசர் சலீம் மர்­சூபின் தலை­மை­யி­லான குழு, அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாகக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

குழுவில் அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் தலை­வரும் பொதுச் செய­லா­ளரும் அங்கம் வகிக்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். கடந்த 19 ஆம் திகதி இடம்­பெற்ற குழுவின் அமர்­விலும் அவர்கள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;
'அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெளி­வான நிலைப்­பாட்­டி­லேயே இருக்­கி­றது. ஷரீஆ சட்டம் மனி­தர்­க­ளுக்குத் தீங்­கி­ழைக்கக்கூடிய சட்­ட­மல்ல. ஆனால் சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும்போது சில சிக்­கல்கள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சிக்­கல்­க­ளுக்குத் தீர்­வு­க­ளா­கவே திருத்­தங்கள் அமைய வேண்டும்.

ஷரீஆ சட்டம், முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்டம் என்­ப­ன­வற்றின் அடிப்­ப­டை­களை அநேகர் அறி­யா­துள்­ளனர். மக்­களே தெளி­வில்­லாமல் இருக்­கி­றார்கள். எனவே இதுபற்றி மக்கள் தெளிவூட்­டப்­பட வேண்டும்.

முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தை அமுல்­ப­டுத்தும் காதி நீதி­மன்­றங்கள் சில சவால்­களை எதிர்­கொள்­கின்­றன. இது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும்.

சட்­டத்தில் திருத்­தங்­களை சிபா­ர்சு செய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு உலமா சபையின் பத்வா குழு­வினைச் சந்­தித்து இறு­தி­யாக ஆலோ­ச­னை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ளமை வரவேற்கத்தக்கதாகும்.

முஸ்லிம் சமூகத்துக்காக எமது முன்னோர்கள் வடிவமைத்துத் தந்துள்ள இச்சட்டத்தையும் காதி நீதிமன்ற முறைமையையும் பாதுகாத்துக் கொள்வது எமது கடமையாகும்' என்றார்.

நன்றி - விடிவெள்ளி