Headlines
Loading...
வில்பத்து வர்த்தமானிக்கெதிராக முஸ்லிம்கள் வழக்கு; போராட்டத்திற்கும் முஸ்தீபு

வில்பத்து வர்த்தமானிக்கெதிராக முஸ்லிம்கள் வழக்கு; போராட்டத்திற்கும் முஸ்தீபு


வில்பத்து வடக்கு பகுதியை வன பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக முஸ்லிம் சிவில் அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளன.

இது தொடர்பில் முஸ்லிம் கவுன்சிலின் தலைமையில் முஸ்லிம் சிவில் அமைப்புகள் இன்றைய தினம் ஒன்றுகூடிக் கலந்துரையாடவுள்ளதாக தெரிய வருகிறது.

வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக ஒரு மாத காலத்தினுள் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளதால் விரைவாக இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் ஹில்மி அகமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் இதுவரை கருத்து வெ ளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.