Headlines
Loading...
முஸ்லிம் தனியார் பஸ் உரிமையாளர்கள் கவனத்திற்கு; பயணிகளின் வேண்டுகோள்

முஸ்லிம் தனியார் பஸ் உரிமையாளர்கள் கவனத்திற்கு; பயணிகளின் வேண்டுகோள்



பயணம் சொகுசாக அமைவதற்கு இன்றைய கால தனியார் பேரூந்துகளின் சேவை அளப்பெரியது, நெடுந்தூர பயணங்களை சொகுசாக மாற்ற தனியார் சொகுசு பஸ்கள் பெரிதும் உதவி புரிகிறது. முஸ்லிம்களின் தனித்துவ ஊடகம் எனற வகையில் முஸ்லிம்களாக இருக்கின்ற பஸ் உரிமையாளர்களுக்கு பயணிகள் சார்பில் ஒரு சில விடயங்களை குறிப்பிட வேண்டும்.

வேலைப்பழு, வைத்தியசாலை, உறவினர் வீடுகளுக்கு செல்லுதல் போன்ற காரணங்களுக்காக பயணங்களை மேற்கொள்ளும் நாம் பஸ்களின் தரம் குறித்து அதிகம் சிந்தித்து பயணங்களை மேற்கொள்ளுகின்றனர். சேவை என்பது பணம் சம்பாதிப்தையும் தாண்டி மக்கள் பணியாகும் அப்படி ஒரு சேவைதான் பஸ் சேவை, இந்த சேவை சரியாக சில பஸ்களில் இடம்பெறவில்லை காரணம் ஊழியர்களின் அசமந்த போக்கு. உரிமையாளர்கள் இதனை கருத்திற்கொள்ள வேண்டும்.

பேரூந்துகளில் முறைப்பாட்டு பெட்டியை பொருத்த  வேண்டும், பயணிகளின் நலனை கருத்திற்கொண்டு செயற்பட வேண்டும் உதாரணமாக பஸ் நடத்துனரிடம் முறையிடுகிறபோது அவர் பாய்ச்சலுடன் பேசுவதை அவதானிக்க முடிகிறது. இதனை பயணிகள் விரும்புவதில்லை. இது சமூக நலன் கருதிய செய்தியே