Headlines
Loading...
மைத்திரி - ரணில் கூட்டுக்கு ஞானசார இயக்குனரா? முஸ்லிம்களை குறிவைக்கிறார்களா?

மைத்திரி - ரணில் கூட்டுக்கு ஞானசார இயக்குனரா? முஸ்லிம்களை குறிவைக்கிறார்களா?



மைத்திரி பால சிறிசேனவை ஜனாதிபதியாக முஸ்லிம்கள் தெரிவு செய்தமைக்கான முக்கிய காரணம் கடந்த அரசில் முஸ்லிம்களுக்கு எதிராக பலதரப்பட்ட வன்முறைகள் இழைக்கப்பட்டது. இதற்கெல்லாம் மூலகாரணமாக இருந்த ஞானசாரவை அன்றிருந்து மஹிந்த அரசு கண்டும் காணாமல் இருந்தது.

 ஆனால் அன்று அதிகாரத்தில் வெளிப்படையாக மோதிய ஞானசார இன்று மறைமுகமாக மோதுவது போல எமக்கு தெரிகிறர் காரணம் ஞானசார நினைத்த அனைத்துமே இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மறிசுக்கட்டி பிரதேச பறிமுதல், தம்புள்ள காணி, கூரகல பள்ளி, கருமலையுற்று பள்ளி இப்படி அடுக்கடுக்கான பிரச்சினைகளுக்கு மூல காரணம் ஞானசார என்பதை யாரும் மறந்துவிடமுடியாது.