Headlines
Loading...
நாட்டில் அதிகரித்து வரும் குப்பையும் டெங்குவும்

நாட்டில் அதிகரித்து வரும் குப்பையும் டெங்குவும்



ஹட்டன் டிக்கோயா நகர சபை அண்மித்த பகுதியில் அதிகமாக கொட்டப்பட்ட குப்பைகளின் காரணமாக அந்த பகுதியில் அதிகமான துர்நாற்றறம் வீசுவதாக பிரதேசவாசிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதனால் டெங்கு அபாயம் ஏற்பட்டடுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
மேலும் குப்பை கடந்த சில வாரங்களாக சேகரிக்கப்படாமையே இதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்பாட்டம் ஒன்றையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பாக நகர சபைக்கு தெரிவித்தும் எதுவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹட்டன் குடாஓயா பகுதியிலும் அண்மையில்  குப்பை கொட்டுவதற்கு எதிராக ஆர்ப்பாடட்ங்கள் மன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும்,  குப்பைகளை கொட்டுவதற்கு தகுந்த இடத்தை வெகுவிரைவில் அதாவது லிந்துலை பகுதியில் இட ஒதுக்கம் செய்யப்படவுள்ளதாகவும் நகரசபை சுட்டிக்ககாட்டியுள்ளது.