Headlines
Loading...
டெங்கு : திருமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கிறது

டெங்கு : திருமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கிறது



திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் டெங்கு நோய் ஓர­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் தற்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் டெங்கு பரவும் அபாய நிலை உரு­வா­கி­யுள்­ளது. அதனை ஆரம்ப நிலை­யி­லேயே தடுப்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் கிழக்கு மாகா­ண­சபை மேற்­கொண்­டுள்­ளது என கிழக்கு மாகாண முத­ல­மைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரி­வித்தார்.

கிழக்கில் டெங்கு ஒழிப்புப் பணிகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் விப­ரிக்­கையில்; 

கிழக்கு மாகா­ணத்தில் மட்­டக்­க­ளப்பில் இம் மாதம் டெங்கு நோயினால் மூவர் மர­ணித்­தி­ருக்­கி­றார்கள். டெங்கு நுளம்பு பரவும் இடங்­களை துப்­பு­ரவு செய்­வ­தற்­கான  நட­வ­டிக்­கைகள் சுகா­தார வைத்­திய அதி­காரி காரி­யா­ல­யத்தின் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. ஏறா­வூரில் இந்­ந­ட­வ­டிக்­கைகள் தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன.

எதிர்­வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை­யி­லான தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தில் டெங்கு நுளம்­பினை அழிக்கும் நட­வ­டிக்­கைகள் தொடர்ச்­சி­யாக காலை முதல் மாலை வரை மேற்­கொள்­ளப்­படும். ஒவ்­வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழ­மை­களில் பாட­சா­லைகள் மற்றும் அரச அலு­வ­ல­கங்­களில் காலை 8.30 முதல் 10.30 மணி­வ­ரையில் 2 மணித்­தி­யா­லங்கள் துப்­பு­ரவுப் பணி­களில் ஈடு­பட வேண்­டு­மென கிழக்கு மாகாண சபை உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளது.

டெங்கு நுளம்பு பரவும் இடங்­களை இனங்­கண்டு துப்­பு­ரவு செய்யும் பணி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு தேவை­யான ஆள­ணி­களை நிய­மித்துக் கொள்­ளு­மாறு கிழக்கு மாகா­ணத்தைச் சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு உத்­த­ரவு வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான நிதி­யினை ஒதுக்­கு­வ­தற்கும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வடக்கு சுகா­தார அமைச்சர் என்னைத் தொடர்பு கொண்டு கிழக்கில் டெங்கு நுளம்பு பர­வு­வதைத் தடுப்­ப­தற்­காக டெங்கு ஒழிப்பு விஷேட படை­யணி இரண்­டினை அனுப்பிவைத்தார் கிளி­நொச்­சியில் டெங்குநோய் பரவிய போது இந்தப் படையணியே முன்னின்று செயற்பட்டு டெங்கு நுளம்பு பரவுவதைத் தடுத்தது. வடமாகாண சுகாதார அமைச்சருக்கு நான் நன்றிகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.