Headlines
Loading...
கட்­டு­கஸ்­தோட்­டை முஸ்லிம் பாமசிக்குள் நுழைந்து இனவாதிகள் அட்டகாசம்

கட்­டு­கஸ்­தோட்­டை முஸ்லிம் பாமசிக்குள் நுழைந்து இனவாதிகள் அட்டகாசம்



கட்­டு­கஸ்­தோட்­டையில் உள்ள முஸ்லிம் ஒரு­வ­ருக்கு  சொந்­த­மான பிர­பல மருந்து விற்­பனை நிலை­யத்­துக்குள் நுழைந்து  பல­வந்­த­மாக அங்கு  வீடியோ  படங்­களை எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் அந்த நிலையம் பற்றி தவ­றான தக­வல்­களை வெளி­யிட்­டுள்­ளனர். மஹா சொஹன் பல­காய எனும்  பௌத்த இன­வாத அமைப்கே கடந்த வெள்­ளி­யன்று  ஜும்ஆ தொழு­கைக்கு நிறு­வ­னத்தை  மூடிக்­கொண்­டி­ருந்த  போது இந்த அட்டகாசத்தை புரிந்துள்ளது.
இவர்­க­ளது  இந்த செய­லினால் ஊழி­யர்­க­ளுக்கு ஜும்ஆ  தொழு­கையில் பங்­கேற்க முடி­ய­வில்லை. இந்த இயக்­கத்தின் சார்பில் இரு ­பிக்­கு­களும் இளை­ஞரும்  கடை­யினுள்  பல­வந்­த­மாக நுழைந்­துள்­ளனர். இந்த  இரண்டு பிக்­கு­மாரும் அவ் இயக்­கத்தின் முக்­கிய பிர­மு­கர்­க­ளாவர். 

இவர்­க­ளோடு  சேர்ந்து ஔடத கட்­டுப்­பாட்டு நிறு­வன  அரச அதி­கா­ரி­களும் வந்­துள்­ளனர். அரச அதி­கா­ரிகள் வந்­ததால் மூடிக் கொண்­டி­ருந்த கடையை மீண்டும் திறந்து அவர்­க­ளுக்கு இட­ம­ளிக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. இந்த அதி­கா­ரிகள் நுழைந்­த­தோடு மஹா சொஹன்  பல­காய அமைப்பும் உள்ளே நுழைந்து வீடியோ படங்­களை எடுத்­துள்­ளது. 

அதி­கா­ரிகள் இந்த பரி­சோ­தனை பற்றி எதுவும் அறி­விக்­காத போதும் அனு­ம­தி­யின்றி பல­வந்­த­மாக உள்­நு­ழைந்த மஹா சொஹன்  அமைப்பு இங்கு காலம்  கடந்த மருந்து இருந்­த­தா­கவும் பாவ­னைக்கு உத­வாத மருந்து இருந்­த­தா­கவும் ஆபத்து விளை­விக்கும் மருந்து  இருந்­த­தா­கவும் கருத்து வெளி­யிட்­டள்ளது. 

இந்த இன­வாத அமைப்பு  முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அமைக்­கப்­பட்­ட­தாகும். மத்­திய மாகா­ணத்தின் பல இடங்­களில்  முஸ்லிம் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை அண்­மைக்­கா­ல­மாக செய்து வரு­கி­றது. மத்­திய மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்­க­நா­யக்க  இது­பற்றி அண்­மையில் குறிப்­பிட்டு இவற்றின் செயற்­பா­டு­களை தடுக்க வேண்டும் என்றும் கூறி­யி­ருந்தார். 

அரச  ஊழி­யர்­களும் வந்­ததால் கடையை மீண்டும்  திறக்க வேண்டி ஏற்­பட்­டுள்­ளது. இதனால் ஊழி­யர்­களின் ஜும்ஆ  தொழுகை  தடைப்­பட்­டது. இது யாப்பின் மூலம் வழங்­கப்­பட்­டுள்ள அடிப்­படை உரி­மை­யான மதத்தை பின்­பற்றும் உரி­மை­களை மீறும் செய­லாகும். 

அத்­தோடு அரச ஊழி­யர்கள் குறிப்­பிட்ட பல­காய எனும்  இன­வாத அமைப்­புடன் சேர்ந்து வர வேண்­டிய அவ­சியம் இல்லை. இது தவ­றான  நட­வ­டிக்­கை­யாகும். எந்­த­வொரு  தனி­ம­னி­த­னுக்கோ, இயக்­கத்­திற்கோ, தனியார் இல்­லத்­திற்கோ, நிறு­வ­னத்­திற்கோ அனு­ம­தி­யின்றி பல­வந்­த­மாக நுழைய முடி­யாது. இதனை  அதி­காரம் வழங்­கப்­பட்­டுள்ள அதி­கா­ரி­களும் பொலி­ஸா­ருமே செய்யலாம். இவ்வாறு தனியார் நுழைவது  சட்ட மீறலாகும்.  இதுபற்றி பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  அல்லாவிடில் தொடர்ந்தும் நடந்து பாரிய விளைவுகளை ஏற்படுத்தலாம் என  முஸ்லிம் வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.