Headlines
Loading...
அளுத்­கம முஸ்­லிம்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கா­தது ஏன்? ஹிஸ்­புல்லா கேள்வி

அளுத்­கம முஸ்­லிம்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கா­தது ஏன்? ஹிஸ்­புல்லா கேள்வி



 சபையில் அமைச்சர் ஹிஸ்­புல்லா கேள்வி

பேரு­வளை, அளுத்­கம சம்­ப­வங்கள் நிகழ்ந்து ஆயிரம் நாட்கள் கடந்த பின்­னரும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு இழப்­பீ­டுகள் வழங்­காமலிருப்பது ஏன் என மீள்­கு­டி­யேற்ற இரா­ஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.ஏம்.ஹிஸ்­புல்லா சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

மூவர் கொலை­செய்­யப்­பட்டும் 15பேர் காய­ம­டைந்து 280 பேர் பாதிப்­ப­டைந்த இந்த சம்­ப­வத்தை முஸ்­லிம்கள் மறக்­க­வில்லை என சுட்­டிக்­காட்­டிய இரா­ஜாங்க அமைச்சர், அவர்­களின் தர­வுகள் அனைத்தும் தயா­ரா­க­வி­ருக்­கின்ற நிலையில் மேலும் தாம­த­மின்றி இழப்­பீ­டு­களை உடன் வழங்க வேண்­டு­மென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க ஆகி­யோ­ரி­டத்தில் வலி­யு­றுத்­தினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் கூட்டு எதிர்க்­கட்சி ஆத­ரவு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன சமர்ப்­பித்த நாட்டின் பொரு­ளா­தார நிலை­மைகள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,  நாட்டின் பொரு­ளாதா­ரத்­தினை பார்க்­கையில் ஓர்  இக்­கட்­டான நிலை­மையில் தான் இருந்து கொண்­டி­ருக்­கின்றோம். நாட்டின் பொரு­ளா­தா­ரத்­தினை வளர்ச்­சிப்­பா­தையில் கொண்டு செல்­வ­தென்றால் அதற்­காக அனை­வரும் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்க வேண்டும்.

குறிப்­பாக தற்­போ­தைய சூழலில் கூட்டு எதி­ர­ணி­யினர் அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்­க­ளுக்கு எதிர்ப்­புக்­களை வெளி­யி­டு­கின்­றனர். போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர். அவற்றை விடுத்து அனை­வரும் நாட்டின் அபி­வி­ருத்­தியை கருத்­திற்­கொண்டு பொரு­ள­ாதார மேம்­பாட்­டுக்­காக ஒன்­று­ப­ட­வேண்டும் என் இந்த சந்­தர்ப்­பத்தில் பகி­ரங்­க­மாக அழைப்பு விடு­கின்றேன்.
இந்த நாட்டில் வடக்கு, கிழக்கு மக்கள் யுத்­தத்தால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அவர்­க­ளுக்­கான செயற்­றிட்­டங்கள் படிப்­ப­டி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அண்­மையில் சாலாவ இரா­ணுவ முகாமில் வெடிப்பு ஏற்­பட்ட போதும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீ­டுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன.
அவ்­வா­றி­ருக்­கையில் இந்த நாட்டில் முஸ்­லிம்கள் மீது அரங்­கேற்­றப்­பட்ட மிக மோச­மான வன்­மு­றைச்­சம்­ப­வங்­க­ளாக பேரு­வளை, அளுத்­கம வன்­மு­றைகள் அமை­கின்­றன.

இதன்­போது மூன்று உயிர்கள் பலி­யா­கின. 15பேர் வரையில் படு­கா­ய­ம­டைந்­தனர். 280 பேர்­வ­ரையில் பாதிக்­கப்­பட்­டனர்.  ஆனால் அவர்­க­ளுக்­கான இழப்­பீ­டுகள் இன்­று­வ­ரையில் வழங்­கப்­ப­ட­வில்லை. இது வேத­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

குறிப்­பாக விடி­வெள்ளிப் பத்­திரிகையில் முஸ்லிம் சிவில் அமைப்­பொன்றை மேற்கோள் காட்டி தலைப்­புச்­செய்­தி­யொன்று வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அளுத்­கம, பேரு­வளை சம்­ப­வங்கள் நிகழ்ந்து ஆயிரம் நாட்கள் கடந்தும் தற்­போது வரையில் இழப்­பீ­டுகள் வழங்­கப்­ப­ட­வில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­திகள் அச­மந்­த­மாக இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.
உண்­மை­யி­லேயே இந்த நாட்டில் ஆட்சி மாற்­றத்­திற்கு அந்த சம்­ப­வங்­களும் அடிப்­ப­டைக்­கா­ர­ணங்­க­ளா­கின்­றன. அவ்­வா­றான நிலையில் அதில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இழப்­பீ­டு­களை வழங்­கா­ம­லி­ருப்­ப­தற்­கான காரணம் என்ன?
தர­வுகள் அனைத்தும் திரட்டப்பட்டு அனைத்துமே தயாராகிவிருக்கின்ற போதும் அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படாமைக்கு காரணம் என்ன? இந்த தாமதத்தினால் முஸ்லிம்களின் பிரதிநிதிகளாகிய நாம் பதில்சொல்லவேண்டிய கடப்பாட்டிற்குட்பட்டுள்ளோம்.

இந்த சபையில் பிரதமரும், நிதி அமைச்சரும் உள்ள இச்சமயத்தில் அந்த மக்களுக்கான இழப்பீட்டை உடன் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோருகின்றேன் என்றார்.