Headlines
Loading...
மது­ தொழிற்சாலையின் பின்­ன­ணியில் ஐ.தே.க

மது­ தொழிற்சாலையின் பின்­ன­ணியில் ஐ.தே.க



மட்­டக்­க­ளப்பில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரும் புதிய மது­பான உற்­பத்தி நிலை­யத்தின் பின்­ன­ணியில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்கள் இருப்­ப­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீனித்­தம்பி யோகேஸ்­வரன் சபையில் குற்­றம்­சாட்­டினார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இலஞ்சம் அல்­லது ஊழல் பற்­றிய விசா­ரணை ஆணைக்­குழு இலஞ்சம் தொடர்­பான திடீர் சோத­னைகள், முற்­பணக் கணக்கின் வரை­ய­றை­களில் திருத்தம் மேற்­கொள்ளல் தொடர்­பான சட்­ட­மூல விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில், 
முன்னாள் ஆட்­சி­யா­ளர்கள் இலஞ்சம் பெறு­கின்­றார்கள். ஊழலில் ஈடு­ப­டு­கின்­றார்கள். இவை அனைத்தும் எமது ஆட்­சியில் இல்­லா­தொ­ழிக்­கப்­படும் என்­ப­தற்கு அப்பால் இலஞ்சம் ஊழல் இடம்­பெ­று­வ­தற்கும் இட­ம­ளிக்­கப்­ப­ட­மாட்­டாது என கூறியே ஆட்­சியில் அமர்ந்­தார்கள். நல்­லாட்சி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் எனவும் கூறி­னார்கள். ஆனால் நல்­லாட்­சி­யிலும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்ந்தும் இடம்­பெ­று­கின்ற கவ­லைக்­கி­ட­மான நிலை­மையே உள்­ளது. 

நாட்டில் நல்­லாட்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது என்று கூறப்­பட்­டாலும் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் கும்­பு­று­மூ­லையில் சட்­டத்­திற்கு முர­ணாக மது­பான உற்­பத்தி நிலை­ய­மொன்று நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

இந்த மது­பான உற்­பத்தி நிலை­யத்தின் தவி­சாளர் யார் எனப் பார்க்­கையில் இலங்கை மத்­திய வங்கி ஆளு­நரின் மரு­ம­க­னான அர்ஜுன் அலோ­சி­யஸே காணப்­ப­டு­கின்றார். 

இந்த உற்­பத்தி நிலை­யத்­தினை நிர்­மா­ணிப்­ப­தற்­காக இவர் 230 கோடியை முத­லீடு செய்­துள்­ள­தோடு இந்­திய நிறு­வ­ன­மொன்று 220 கோடியை முத­லீடு செய்­துள்­ளது. மொத்­த­மாக 450 கோடி ரூபா  முத­லீட்டில் இந்த உற்­பத்தி நிலையம் ஸ்தாபிக்­கப்­ப­டு­கின்­றது. 

மோசடிக் குற்­றச்­சாட்டில் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­வர்கள் இவ்­வாறு முத­லீ­டு­களை மேற்­கொள்­வ­தற்கு கோடிக்­க­ணக்­கான பணம் எங்­கி­ருந்து கிடைக்­கின்­றது. குற்­றச்­சாட்டில் உள்­ள­வர்கள் இவ்­வா­றான முத­லீ­டு­களை செய்­வ­தற்கு எவ்­வாறு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­டு­கின்­றது.

மேலும், கிழக்கு மாகா­ண­ ச­பை­யிலும், மாவட்ட அபி­வி­ருத்தி குழுக் கூட்­டத்­திலும் இந்த நிர்­மா­ணத்­திற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தோடு இதனை உட­ன­டி­யாக நிறுத்­து­வ­தற்­கான தீர்­மா­னமும் எடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தீர்­மா­னத்தை பிர­தேச சபை செய­லா­ள­ருக்கு அனுப்பி நடை­மு­றைப்­ப­டுத்­து­மாறு கோரப்­பட்­டள்­ளது.

இருப்­பினும் அத்­தீர்­மானம் அறி­விக்­கப்­பட்­ட­போதும் நிர்­மா­ணப்­ப­ணிகள் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளன. இவற்­றுக்­கி­டையில் இந்த நிர்­மா­ணப்­ப­ணியை மக்கள் விரும்­ப­வில்லை. அவர்­களின் பிர­தி­நி­தி­க­ளாக நாம் எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் சந்­தர்ப்­பத்தில் எம்மை இணங்கிச் செல்ல வைப்­ப­தற்கு முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன.

மிகவும் கவ­லைக்­கு­ரிய விடயம் என்­ன­வென்றால் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட அமைப்­பா­ளரும் பிறி­தொரு அக்­கட்சி ஆத­ர­வா­ளரும் இந்த நிர்­மா­ணத்­திற்கு தடை­யாக இருக்க வேண்­டா­மென்று எம்­மோடு பேரம்­பேச முயல்­கின்­றார்கள். 

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் 20மது­பா­ன­சா­லை­களே சட்­டத்தின் பிர­காரம் காணப்­ப­ட­மு­டியும். அவ்­வா­றி­ருக்கையில் 2009ஆம் ஆண்டு மட்­டக்­க­ளப்பில் 47மது­பா­ன­ சாலைகள் காணப்­பட்­டன. தற்­போது மட்­டக்­க­ளப்பில் 58மது­பா­ன­ச­லைகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு யார் அனு­மதி அளித்­தது? எவ்­வாறு அனு­ம­திகள் வழங்­கப்­பட்­டன. 

விடு­த­லைப்­பு­லி­களின் காலத்தில் அவர்­களின் பகு­தி­களில் எந்­த­வொரு மது­பா­ன­சா­லை­களும் இருக்­க­வில்லை. ஆனால் தற்­போது அங்­கெல்லாம் புதி­து ­பு­தி­தாக மது­பா­ன­சா­லைகள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன.

 இவற்­றுக்­கெல்லாம் யார் அனு­மதி வழங்­கி­யது.  அண்­மையில் மட்­டக்­க­ளப்பில் இரண்டு மதுபானசாலைகளை மூடுவதற்குரிய நடவடிக்கைகளை நான் மேற்கொண்டபோது இரண்டு நபர்கள் என்னிடத்தில் பேரம்பேசினார்கள். இவ்வாறு என்னிடத்தில் பெரிய தொகை பணம் வழங்கத் தயாராக இருக்கின்றார்கள் என்றால் ஒவ்வொரு அதிகாரிகள், அரசியல்வாதிகளிடத்திலும் எவ்வளவு பணத்தை பின்கதவால் வழங்குவார்கள் என்று எண்ணிப்பார்க்க வேண்டும்.

ஆகவே, இலஞ்சம் மற்றும் ஊழலை முற்றாக ஒழிப்பதாக கூறும் நல்லாட்சி யாளர்கள் உடனடியாக இவ்வாறான மக்களுக்கு விரும்பாத விரோதமான விடயங்களை நிறுத்தவேண்டும் என்றார். 

Courtesy : Vidivelli