Headlines
Loading...
தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்

தொழிலாளர்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்



Ceylon Muslim Colombo Correspondent 

அரச பெருந்தோட்டயாக்கம்  கோரியிருந்த 3 வார கால அவகாசம் இன்றோடு முடிவடையும் நிலையில், தோட்ட தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று, இலங்கை செங்கொடி சங்கத்தின் பொதுச்செயலாளர், மேனகா கந்தசுவாமி கூறினார்.

அரச பெருந்தோட்டயாக்கத்திற்கு சொந்தமான காணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தும் உன்னஸ்கிரிய நகரில், கடந்த மாதம் (பெப்ரவரி) 28 ஆம் திகதி  முதல் தொடர் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் போரட்டத்தின் 4 ஆவது நாள், மாரச் 3ஆம் திகதியில் இருந்து 3 வாரத்திற்குள் செங்கொடி சங்கத்தினை பேச்சுவார்த்தைக்கு அழைப்பாதாக எழுத்து மூலம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டிருந்த நிலையில், போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.