Headlines
Loading...
இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்களின் ஆடையை அணிவது ஏன்? (முழுவிவரம்)

இலங்கை முஸ்லிம்கள் பாகிஸ்தானியர்களின் ஆடையை அணிவது ஏன்? (முழுவிவரம்)



காப்பக படம்: இலங்கை முஸ்லிம் தாயும் மகளும் - டெய்லி மெயில் UK

இலங்கை முஸ்லிம்கள் தமக்கென்றொரு ஆடைக் கலாசார பாரம்பரியத்தை பின்பற்றாது அரபு நாடுகளினதும் முஸ்லிம் நாடுகளினதும் ஆடைக் கலாசாரத்தை பின்பற்றுவதுதான் அடுத்த மதத்தவர்கள் மத்தியில் தவறான கண்ணோட்டங்கள் ஏற்படக் காரணம் என பிரபல சிங்கள மொழி மூல இஸ்லாமிய பிரசாரகர் அன்வர் மனாதுங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

பிறப்பில் பௌத்தரான இவர் பின்னர் கிறிஸ்தவ மதத்தை தழுவி போதகராகவும் கடமையாற்றினார். எனினும் பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தை தழுவிக் கொண்டதுடன் இஸ்லாம் தொடர்பில் சிங்கள மக்களுக்கு விளக்கங்களையும் வழங்கி வருகிறார். 

அவர் குறித்த நேர்காணலில் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் முஸ்­லிம்­களில் ஒரு தரப்பு கலா­சா­ரத்தை மாற்­று­கி­றது. உதா­ர­ணத்­துக்கு சம்­ப­வ­மொன்­றினைக் குறிப்­பிட முடியும். கட்­டா­ருக்கு வேலை­வாய்ப்பு பெற்று பெற்று மௌலவி ஒருவர் இலங்­கை­யி­லி­ருந்து வந்தார். அவர் வரும் போது ஜுப்­பாவும், அத­னுடன் கூடிய நீள காற்­சட்­டையும் அணிந்­தி­ருந்தார். அவர் முதல் மாதம் சம்­பளம் பெற்­றதும் தனது உடையை மாற்றிக் கொண்டார். முதல் மாத சம்­ப­ளத்தில் கட்டார் நாட்­டவர் அணியும் உடை வாங்­கி அணிந்தார். ஏன் இலங்­கை­யி­லி­ருந்து அணிந்து வந்த உடையை மாற்­றி­னீர்கள் என்று கேட்டேன். இலங்­கையில் அணிந்­தது பட்­டானி (பாகிஸ்தான்) ஆடை என்றார். அப்­ப­டி­யென்றால் இலங்­கையில் பாகிஸ்தான் ஆடை­யல்­லவா அணி­யப்­ப­டு­கி­றது. மத்­ர­ஸாக்­க­ளிலும் இங்கே இவ்­வா­றான ஆடை­யையே மாண­வர்கள் அணி­கி­றார்கள்.

இவர்கள் இருப்­பது இலங்­கையில், அணி­வது பாகிஸ்தான் உடை. அந்த மௌலவி கட்­டாரில் இருந்து இலங்கை திரும்­பினார். மீண்டும் அதே உடை­யு­டனே வந்தார். இது தான் சுன்னா என்று அவர் நினைக்­கிறார். 

பெண்­களும் இப்­ப­டித்தான். அதிகம் மாறி வரு­கி­றார்கள். பெண்கள் கறுப்பு நிற அபா­யாதான் அணிய வேண்டும் என்ற நிய­தி­யில்லை. இதனை அனை­வரும் ஏற்­றுக்­கொள்­கி­றார்கள். இவ்­வாறு ஆடை கலா­சாரம் மாற்­ற­ம­டை­வ­தால்தான் இன­வா­திகள் முஸ்­லிம்கள் இலங்­கையை அரபு கொல­னி­யாக்க முயற்­சிப்­ப­தாக குற்றம் சுமத்­து­கி­றார்கள்.

இலங்­கையில் முஸ்­லிம்­களும் சிங்­க­ள­வர்­களும் பல நூற்­றாண்டு காலத்­துக்கு முன்பு ஆடை கலா­சா­ரத்தில் வேறு­பா­டுகள் இருக்­க­வில்லை. ஆனால் இன்று பாரிய வேறு­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. சிங்­க­ள­வர்கள் மாத்­தி­ர­மல்ல முஸ்­லிம்­களும் மேலைத்­தேய கலா­சா­ரத்­துக்கு அடி­மை­யாகிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

1500 ஆம் ஆண்டு ரொபட் நொக்ஸ் என்ற ஆங்­கி­லேயர் ஒரு புத்­தகம் எழு­தி­யுள்ளார். இலங்கை மக்­களை நேரில் கண்டு அதனை எழு­தி­யுள்ளார். அவர் ஆங்­கி­லத்தில் எழு­திய புத்­தகம் ‘எதா ஹெல­திவ’ என்று சிங்­க­ளத்தில் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது.  

அவர் தனது புத்­த­கத்தில் இப்­படிக் குறிப்­பிட்­டுள்ளார். ‘சிங்­க­ள­வர்கள் 6 அங்­குல நீள தாடி வைத்­தி­ருந்­தார்கள். அவர்கள் சாரம் (லுங்கி) மாத்­திரம் அணிந்­தி­ருந்­தார்கள். மேலாடை அணிந்­தி­ருக்­க­வில்லை. முஸ்­லிம்­களும் இவ்­வாறே ஆடை அணிந்­தி­ருந்­தார்கள். சிங்­களப் பெண்கள், மற்றும் முஸ்லிம் பெண்கள் மத்­தி­யிலும் ஆடை விவ­கா­ரத்தில் வேறு­பாடு காணப்­ப­ட­வில்லை.

முஸ்­லிம்­களின் சிலர் எமது தேசிய கீதம் இசைக்­கப்­படும் போது எழுந்து நிற்­ப­தில்லை. நமோ…. நமோ…. என்று கூறு­வது சிர்க் என்­கி­றார்கள். இஸ்­லாத்தில் எழும்பி நிற்­பது வணக்­க­மல்ல. எஹுதியின் உடல் தக­னத்­துக்­காக எடுத்­துச்­செல்­லப்­பட்­ட­போது கூட நபிகள் நாயகம் அவர்கள் எழுந்து நின்று மரி­யாதை செலுத்­தி­னார்கள். தேசிய கீதத்தில் நமோ… நமோ… மாதா என்ற சொற்­களைத் தவிர்த்து எமக்கு தேசிய கீதம் இசைக்­கலாம் அல்­லவா?-

சிலர் ‘ஆயு­போவன்’ என்று சொல்ல வேண்டாம். என்­கி­றார்கள். இது தவறு. இவ்­வாறு நினைப்­பதே எமக்குள் உள்ள இடை­வெ­ளியை விரிவு­ப­டுத்­து­கி­றது.

பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­வது ஒரு வரை­ய­றைக்­குள்­ளாக்­கப்­பட வேண்டும். இதற்­கென அரசு சட்­ட­மொன்­றினை இயற்ற வேண்டும். இன்று மத்­ர­ஸாக்கள் ஆரம்­பிக்­கப்­பட்டு பின்பு அவை பள்­ளி­வா­சல்­க­ளாக மாறி உள்­ளன. முஸ்­லிம்கள் நாம் சன நெருக்­கடி மிக்க சந்­தியில் பல பள்­ளி­வா­சல்­களை  நிறு­விக்­கொள்­கிறோம்.

அப்­பள்­ளி­வா­சல்­களின் அதான்கள் ஏனைய சமூ­கத்­தி­ன­ருக்கு அசௌ­க­ரி­யங்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. 

நாம் முஸ்லிம் அல்­லாத ஒரு நாட்டில் வாழ்­கிறோம் என்­பதை கவ­னத்திற் கொள்ள வேண்டும். சிங்­கப்­பூரில் பள்­ளி­வா­சல்கள் எவ்­வாறு எந்த இடத்தில் அமைய வேண்­டு­மென்­பது சட்­ட­மாக்­கப்­பட்­டுள்­ளது. பள்­ளி­வா­ச­லுக்கு ஒதுக்­கப்­படும் காணியின் அளவு, வாகனத் 
தரிப்­பி­டத்­துக்­கான காணியின் அளவு என்­ப­னவற்றை சட்­டமே தீர்­மா­னிக்­கி­றது. இலங்­கை­யிலும் இவ்­வா­றான ஒரு சட்டம் இயற்றிக் கொள்­ளப்­பட வேண்டும்.

கிரா­மங்­களின் மத்­தியில் பன்­ச­லைகள் அமைந்­துள்­ளன. பன்­ச­லைக்கு அருகில் பள்­ளி­வாசல் நிர்­மா­ணிக்­கப்­படும் போது பள்­ளி­வா­ச­லைச்­சுற்றி முஸ்­லிம்கள் குடி­யே­று­கி­றார்கள். பன்­ச­லையில் இருக்கும் தேரர்­க­ளுக்கு சிங்­க­ள­வர்­களின் வீடு­க­ளி­லி­ருந்தே உணவு வழங்கப்படுகிறது.

பன்சலைக்கருகில் பள்ளிவாசல்கள் அமைவதால் பௌத்த தேரர்கள் தமது உணவுக்குகூட பாதிப்புகள் ஏற்படும் எனக் கருதுகிறார்கள். யார் எமக்கு உணவு வழங்குவது என்று சிந்திக்கிறார்கள்.