Headlines
Loading...
குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள்; நல்லாட்சியை நம்பலாமா?

குருநாகலில் முஸ்லிம்களுக்கு எதிரான போஸ்டர்கள்; நல்லாட்சியை நம்பலாமா?

File Image

சிலோன் முஸ்லிம் விசேட செய்தியாளர்

குருநாகல் வெல்லவ பொலிஸ் பிரிவில் முஸ்லிம்களுக்கு எதிராக நேற்றைய தினம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மகாசோன்பலகாய எனும் அமைப்பின் பெயரிலான இந்த போஸ்டர்களில் முஸ்லிம்களின் வியாபாரத்தை பகிஸ்கரிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த போஸ்டர்கள் குறித்து பிரதேச முஸ்லிம்களும் அரசியல் தலைவர்களும் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டு சென்றதை தொடர்ந்து வியாழக்கிழமை அவை அகற்றப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மகாசோன்பலகாய எனும் இனவாத அமைப்பே அண்மையில் தம்புள்ளை நகரிலும் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரங்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.