Headlines
Loading...
ஆட்சியைக் கவிழ்த்து வீட்­டிற்கு துரத்­துவோம்: ஞான­சார தேரர் காட்டம்

ஆட்சியைக் கவிழ்த்து வீட்­டிற்கு துரத்­துவோம்: ஞான­சார தேரர் காட்டம்


ஆட்­சி­யா­ளர்­களை வீட்­டிற்கு துரத்த வேண்­டிய அவ­சியம் தோன்­றி­யுள்­ளதை நாம் உணர்ந்­துள்ளோம். எதிர்­வரும் ஆகஸ்ட் மாதத்­திற்குள் 15 பிக்­குகள் சங்­கத்தை திரட்­டிக்­கொண்டு  தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்­களை   என கடும்­போக்கு பெளத்த அமைப்­பு­க­ளான பொது­பல சேனா, ராவணா பலய, சிங்­கள ராவய, தாதியர் சங்கம் ஆகிய சிங்­கள அமைப்­புக்கள் ஒரு­மித்து சூளு­ரைத்­துள்ளன.

நாரஹேன்­பிட்டி அப­ய­ராம விஹா­ரையில் நேற்று இடம்­பெற்ற மேற்­படி அமைப்­பினைச் சேர்ந்த பிக்­குகள் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவ்­வ­மைப்­புக்­களின் பிர­தி­நி­திகள் மேற்­கண்­ட­வாறு சூளுரைத்­தார்கள்.

இவ்­வூ­ட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றிய  பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட  அத்தே ஞான­சார தேரர், இன்று நாங்கள் மிக வேத­னை­யுடன் இந்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கின்றோம். நாம் கல்வி கற்ற காலத்தில் ஒரு கவி­தையில் குழந்­தை­யில்­லாத ஒரு பெண்ணால் தாயின் பிர­சவ வலியினை அறிந்­து­கொள்ள முடி­யாது  எனக் கற்­றுள்ளோம். அவ்­வா­றான நிலை­மைதான் இன்று எமது நாட்­டிற்கு ஏற்­பட்­டுள்­ளது. அத­னை­யிட்டே நாங்கள் வருந்­து­கின்றோம்.
2014 ஆம் ஆண்­டு­களில் நாம் எமக்­கான மரண சான்­றி­தழ்­களை கையில் வைத்­துக்­கொண்­டி­ருந்தோம். அது தீவி­ர­வாதம் நாட்­டிற்குள் உச்ச நிலையை அடைந்­தி­ருந்த தரு­ண­மாகும். ஆனால் அத்­த­கைய அச்­சு­றுத்­த­லான சூழ­லுக்கு முகம்­கொ­டுத்தும் கூட நாம் யுத்­தத்தி­னையும் வெற்­றிகொண்டோம்.

அவ்­வாறு யுத்­தத்தினை வெற்­றிகொள்ள முன்­னிலையிலிருந்த அர­சியல் தலை­மைத்­து­வங்­களில் விமல் வீர­வன்ச குறிப்­பிட்டுக் கூறக்­கூ­டி­யவராவார். நாடு பற்­றிய உணர்­வுள்­ளவர், உள்­ளார்ந்த அடிப்­ப­டையில் தேசப்­பற்­றுள்ள அர­சி­யல்­வா­தி­யாவார். 

ஆனால் இன்று நாட்டில் இருக்­கின்ற தலை­மைகள் யுத்தத்தின் போது தொப்­பி­கல பகு­தியை ஒரு தனிக்­காடு. அதனுள் யார் வேண்­டு­மா­னாலும் யுத்தம் செய்­யலாம் என்று கூறியவர்களே இன்று நாட்டில் ஆட்­சி­பு­ரியும் தலை­மை­க­ளாக உள்­ளனர்.

அதனால் நாட்டில் ஒரு யுத்­தமே இடம்­பெ­ற­வில்லை என்­பது போன்­றுதான் அவர்கள் நினைத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். நல்­லாட்சி என்­பது அழ­கான பெய­ராக இருந்­தாலும் ஆட்­சி­ய­ளார்­களின் செயற்­பா­டுகள் அழ­கா­ன­தா­கவும் தூய்­மை­யா­ன­தா­கவும் இல்லை.

 இன்று காட்டில் விறகு திருடும் முதி­ய­வ­ருக்கு அமுல்­ப­டுத்­தப்­படும் சட்டம், காத்தான்குடியில் இதுதான் எங்கள் சட்டம் என்று கூறிக்­கொண்டு இளை­ஞர்­களை அடித்­துக்­கொல்­ப­வர்­க­ளுக்கும் தேசிய வனத்­தி­லுள்ள மரங்­களை வெட்­டி­ய­ழிக்கும் அமைச்சர் ரிஷாட் பதியுதீ­னுக்கும்  அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வதில்லை.

அதேபோல் மறு­பு­றத்தில் மத்­திய வங்கி விவ­கா­ரத்தில் இந்த ஆட்­சி­யா­ளர்­களின் செயற்­பா­டா­னது ஆடை­யின்றி இருப்பவன் ஒருவன் மற்­ற­வனை பார்த்து ஆடை­ய­ணி­யாமல் உள்ளான் என்று கேளிக்கை செய்­வது போன்­றுள்­ளது. நாட்டின் பிர­தமர் பெயரும் இந்த விவ­கா­ரத்தில் பேசப்­ப­டு­வது வெட்­கத்­து­க்கு­ரிய செய­லாகும். 

இவ்­வா­றான ஓரு அர­சாங்­கத்தில் வடக்கு கிழக்கில் இரா­ணுவம் முடக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் புலிகள் உட்­பட தமிழ் பிரி­வி­னை­வாத சக்­திகள் சக­லரும் சர்­வ­தேசம் வரை சென்று செயற்­பட ஆரம்­பித்­துள்­ளனர். ஆகவே இந்த ஆட்சி நீடித்தால் இலங்­கையும் லிபியா, சூடான் ஆகிய நாடுகள் போலாகிவிடும்.

ஆட்­சி­யா­ளர்கள் ஆண்கள் என்றால் நேர­டி­யாக மோதலாம். இவர்கள் இரண்டும் கலந்த ஒரு பிறப்பு என்­பதால் அவர்­களை தாக்­கு­வது கடி­ன­மாகும். அவர்கள் தாக்­கிய பின்பே எமக்கு வலிக்­கின்­றது. அவர்கள் தாக்­குதல் நடத்­தும் முறை­மையையும் அறிய முடி­ய­வில்லை என்றார்.