Headlines
Loading...
மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு

மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு தீர்வு

ஷபீக் ஹுஸைன்
அக்குறணை, மல்வானஹின்ன பிரதேச மக்களின் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த சுத்தமான குடிநீர் தேவையை நிவர்த்திக்கும் வகையில், சமூக நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை (25) மக்கள் பாவனைக்காக திறந்து வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 500 பேர் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.