Headlines
Loading...
27ம் திகதி மறிச்சுக்கட்டி செல்கிறது அரச உயர்மட்ட குழு

27ம் திகதி மறிச்சுக்கட்டி செல்கிறது அரச உயர்மட்ட குழு

வில்­பத்து வர்த்­த­மானி அறி­வித்தல் தொடர்பில் அப்­பி­ர­தேச மக்­க­ளுக்குப் பாதிப்­பில்­லாத தீர்­வினை முன்­வைப்­ப­தற்கு மகா­வலி அபி­வி­ருத்தி மற்றும் சூழல் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர் தலை­மை­யி­லான குழு எதிர்­வரும் 27ஆம் திகதி மன்னார் மறிச்­சுக்­கட்­டிக்கு விஜ­யம்­செய்து கள ஆய்­வினை மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

மேலும் அவ்­வாய்­வி­னூ­டாக ஜனா­தி­பதி கையொப்­ப­மிட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்த­மானி அறி­வித்­தலின் பிர­காரம், அதில் பிர­தேச மக்­க­ளுக்கு சொந்­த­மான காணி இருப்­பது உறு­தி­செய்­யப்­ப­டு­மி­டத்து வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­தலை இரத்­து­செய்து திருத்­தி­ய­மைக்­கப்­பட்ட புதிய வர்த்­தமானி அறி­வித்தல் வெளி­யி­டு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­ப­தியின் செய­லாளர் பி.பி. அபேகோன் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கையொப்பமிட்டு வெளி­யி­டப்­பட்­டுள்ள வர்த்­த­மானி அறி­வித்­த­லினால் ஏற்­பட்­டுள்ள சிக்கல் நிலைக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ருக்கும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலை­மை­யி­லான மு.கா. பிர­தி­நி­திகள் மற்றும் முசலி சிவில் சமூக பிர­தி­நி­திகள் அடங்­கிய குழு­வுக்­கு­மி­டை­யி­லான பேச்­சு­வார்த்தை நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே குறித்த உடன்­பாடு காணப்­பட்­டது.

மாலை 3.30 தொடக்கம் 4.45 மணி­வரை தொடர்ந்த அப்­பேச்­சு­வார்­த்­தையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிர­தி­ய­மைச்சர் ஹரீஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சல்மான், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹுனைஸ் பாரூக் ஆகி­யோரும் முசலி சிவில் சமூக அமைப்பின் உறுப்­பி­னர்­க­ளான முஜிபுர் ரஹ்மான், மொயி­னுதீன், நியாஸ் உள்­ளிட்­ட­டோரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர். 

அத்­துடன் மக­ாவலி அபி­வி­ருத்தி மற்றும் சூழல் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், சூழல் பாது­காப்பு அதி­கா­ர­ச­பையின் பணிப்­பாளர் உள்­ளிட்ட அதி­கா­ரி­களும் அச்­சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

0 Comments: