Headlines
Loading...
8வது நாளாக சத்தியாக்கிரகத்தில் முசலி மக்கள்

8வது நாளாக சத்தியாக்கிரகத்தில் முசலி மக்கள்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முசலி பிர­தேச மக்­களின் பூர்­வீக காணி­களை பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­மைக்கு கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்து அம்­மக்கள் ஆரம்­பித்­துள்ள சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் இன்று 8­வது நாளாக தொடர்­கி­றது. 

தமது ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பூர்­வீக காணிகள் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டின் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மூலம் வன பாது­காப்பு பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு ஆக்­கி­ர­மிக்­கப்பட்­டுள்­ள­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்
இரண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களும் இரத்துச் செய்­யப்­பட்டு தமது பூர்­வீக காணி­க­ளுக்கு உத்­தர­வாதம் வழங்­கு­வ­தாக  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எழுத்து மூலம் உத்­த­ரவு வழங்கும் வரை தமது சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் தொடரும் என போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பாலக்­குழி பிர­தேச அபி­வி­ருத்தி சங்­கத்தின் உப தலைவர் எம்.இமாம் இம்­தியாஸ் தெரி­வித்தார். 

மறிச்­சுக்­கட்டி தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முசலி பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. மறிச்­சுக்­கட்டி, பாலக்­குழி, கர­டிக்­குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்தி முறிப்பு, வேப்­பங்­குளம், பொற்­கேணி ஆகிய கிரா­ம மக்கள்  இப்­போ­ராட்­டத்தில் பங்கு கொண்­டுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தமது வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தங்கள் மேட்டு நிலம் விவ­சாய நிலம், என்­பன அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எம்.இமாம் இம்­தியாஸ் தெரி­வித்தார். 

ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம் எத்­த­கைய உறுதி மொழி­களை வழங்­கினாலும் எழுத்து மூலம் உத்­த­ரவு கிடைக்கும் வரை தங்­களின் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரி­வித்தார். 

ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரது உறு­தி­மொ­ழிக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முசலிமக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது.ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முசலி பிர­தேச மக்­களின் பூர்­வீக காணி­களை பாது­காக்­கப்­பட்ட வன பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­மைக்கு கடும் எதிர்ப்­பினைத் தெரி­வித்து அம்­மக்கள்  ஆரம்­பித்­துள்ள சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் நேற்றும் ஆறா­வது நாளாகத் தொடர்ந்­தது. இன்று ஏழா­வது நாளாக போராட்டம் தொடர்­கி­றது. 

தமது ஒரு இலட்­சத்­துக்கும் மேற்­பட்ட பூர்­வீக காணிகள் 2012 மற்றும் 2017 ஆம் ஆண்டின் வர்த்­த­மானி அறி­வித்­தல்கள் மூலம் வன பாது­காப்பு பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு ஆக்­கி­ர­மிக்­கப்பட்­டுள்­ள­தாக அப்­ப­குதி மக்கள் தெரி­விக்­கின்­றனர்
இரண்டு வர்த்­த­மானி அறி­வித்­தல்­களும் இரத்துச் செய்­யப்­பட்டு தமது பூர்­வீக காணி­க­ளுக்கு உத்­தர­வாதம் வழங்­கு­வ­தாக  ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் எழுத்து மூலம் உத்­த­ரவு வழங்கும் வரை தமது சத்­தி­யாக்­கி­ரக போராட்டம் தொடரும் என போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள பாலக்­குழி பிர­தேச அபி­வி­ருத்தி சங்­கத்தின் உப தலைவர் எம்.இமாம் இம்­தியாஸ் தெரி­வித்தார். 

மறிச்­சுக்­கட்டி தக்­கியா பள்­ளி­வா­ச­லுக்கு முன்னால் முசலி பிர­தே­சத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்தும் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்­டத்தில் ஈடு­பட்டு வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. மறிச்­சுக்­கட்டி, பாலக்­குழி, கர­டிக்­குழி மற்றும் ஹுனைஸ் நகர், கொண்­டச்சி, அகத்தி முறிப்பு, வேப்­பங்­குளம், பொற்­கேணி ஆகிய கிரா­ம மக்கள்  இப்­போ­ராட்­டத்தில் பங்கு கொண்­டுள்­ளனர்.

ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் தமது வாழ்­வா­தாரம் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தங்கள் மேட்டு நிலம் விவ­சாய நிலம், என்­பன அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் எம்.இமாம் இம்­தியாஸ் தெரி­வித்தார். 

ஜனா­தி­ப­தியின் செய­லாளர் தன்னைச் சந்­தித்த முஸ்லிம் சிவில் சமூகப் பிர­தி­நி­தி­க­ளிடம் எத்­த­கைய உறுதி மொழி­களை வழங்­கினாலும் எழுத்து மூலம் உத்­த­ரவு கிடைக்கும் வரை தங்­களின் போராட்டம் தொடரும் எனவும் அவர் தெரி­வித்தார். 

ஜனா­தி­ப­தியின் செய­லா­ள­ரது உறு­தி­மொ­ழிக்கு அமைய நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை முசலிமக்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்கிறது.

0 Comments: