Headlines
Loading...
ஜனாதிபதியிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி : அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி

ஜனாதிபதியிடமிருந்து முஸ்லிம்களை பிரிக்க சதி : அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசி

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் வெற்­றிக்குப் பங்­கா­ளர்­க­ளாக இருந்த முஸ்­லிம்­களை அவ­ரி­ட­மி­ருந்து பிரிப்­ப­தற்கு சிலர் முயற்சி செய்­கி­றார்கள்.

ஜனா­தி­பதி முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இன­வா­தி­க­ளுடன் சேர்ந்து செயற்­ப­டு­கிறார் என்று சிலரால் தவ­றான கருத்துப் பரப்பப்­பட்டு வரு­கின்­றது. எனவே முஸ்லிம் சமூகம் விழிப்­பாக இருக்க வேண்­டு­மென தேசிய ஒரு­மைப்­பாடு மற்றும் நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரி­வித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவின் புன­ர­மைப்புத் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலேயே இரா­ஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.­பௌசி இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;  ‘நீண்ட கால­மாக செயற்­ப­டா­தி­ருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவை புன­ர­மைக்கும் பணிகள் தற்­போது ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த முஸ்லிம் மக்கள் தவ­றான பாதையில் வழி நடத்­தப்­ப­டு­வதை ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு ஒரு­போதும் அனு­ம­திக்­காது. இந்த சந்­தர்ப்­பத்தில் முஸ்லிம் பிரிவை துரி­த­மாக செயற்­ப­டுத்த வேண்­டிய தேவை ஏற்­பட்­டுள்­ளது. 

எதிர்­வரும் மாகாண சபை மற்றும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தல்­களில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்கு வெற்­றியைப் பெற்றுக் கொடுக்க வேண்­டி­யது முஸ்­லிம்­களின் கட­மை­யாகும். ஜனா­தி­ப­தியின் தலை­மை­யி­லான நல்­லாட்சி அர­சாங்­கத்­திலே முஸ்­லிம்கள் பீதி­யின்றி சுதந்­தி­ர­மாக வாழும் சூழல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. 

முஸ்­லிம்­களின் தேவை­களைப் பெற்றுக் கொள்­வ­தற்கும் பிரச்­சி­னை­களைத் தீர்த்துக் கொள்­வ­தற்கும் திட்­ட­மிட்டு செயற்­ப­டு­வ­தற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் முஸ்லிம் பிரிவு மேலும் பலம் பொருந்­தி­ய­தாக மாற வேண்­டி­யுள்­ளது.

எனவே, முஸ்­லிம்கள் ஜனா­தி­ப­தியின் கரத்தைப் பலப்­ப­டுத்த ஒன்­றி­ணை­யு­மாறு வேண்டிக் கொள்­கிறேன். 

முஸ்லிம் பிரிவின் கிளைகள் மாவட்ட ரீதியில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அக்­கி­ளைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்களுடன் இணைந்து செயற்படும்.

எதிர்காலத்தில் சுதந்திரக் கட்சியின் அரசாங்கம் ஒன்றினை அமைக்கும் இயக்கத்தோடு முஸ்லிம் பிரிவு செயற்படும் என்றார்.

0 Comments: