Headlines
Loading...
அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரியே இன்று நல்லாட்சியின் முக்கிய தளபதி

அளுத்கம கலவரத்தின் சூத்திரதாரியே இன்று நல்லாட்சியின் முக்கிய தளபதி




இன்றுமுஸ்லிம்கள்எம்மை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எங்கள் ஆட்சிக்கு முன்பு முஸ்லிம்களுக்கு மிகக் கடுமையாக கருமை அனுபவங்களை பரிசாக கொடுத்தவர்களுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படுகின்றனர் என நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது ஆட்சிக் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல இனவாத எதிர்ப்புக்களை முகம் கொடுத்ததை நாம் மறுக்க முடியாது.அதனை ஏற்க மறுப்பது உண்மையை ஏற்க மறுப்பதாகிவிடும்.அந் நேரத்தில் நாம் இவற்றை முடிவுக்கு கொண்டுவர சிந்தித்த போது சம்பிக்க போன்றவர்களால் அவற்றை செய்ய முடியாது போனது.அந் நேரத்தில் நாமும் சில விடயங்களை கவனத்திற் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தோம்.

எமது ஆட்சியில் மாத்திரம் தான் முஸ்லிம்களுக்கெதிரானஇனவாத முன்னெடுப்புக்கள் நடக்கவில்லை.அதற்காக எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றவற்றை சரியென கூறவுமில்லை.முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவினுடைய ஆட்சிகாலத்தில் மாவனல்லை கலவரம் இடம்பெற்றிருந்தது.அது போன்று ஐ.தே.கவினுடைய ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்திருந்தனர்.முஸ்லிம்களுக்கு எதிரான பல கலவரங்கள் ஐ.தே.கவினுடைய ஆட்சிக் காலத்திலேயே இடம்பெற்றிருந்தன.இவ்வாறெல்லாம் நடந்துள்ள போதும் இன்றுமுஸ்லிம்கள் எம்மை மாத்திரமேகுறை கூறிக் கொண்டு அவர்களுடன் இணைந்துள்ளனர்.முஸ்லிம்கள்எமது ஆட்சிக் காலத்திற்குமுன்னுள்ள  வரலாறுகளை மீளநினைவுபடுத்திக் கொள்வது சிறந்ததாகும்.

எமது ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற இனவாத செயல்களை எமது ஆட்சிக் காலத்துக்கு முன்னர் இடம்பெற்ற  இனவாத செயல்களுடன் ஒப்பிடும் போது அளுத்கமை கலவரம் ஒரு கலவரமே அல்ல.இன்று முஸ்லிம் வாக்களித்துள்ள ஜனாதிபதி மைத்திரி அளுத்கமை கலவரம் நடக்கும் போதெல்லாம் எங்களுடன் தான் அப்பம் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.இச் சம்பவம் தொடர்பில் எம்மை குற்றம் குற்றம் சாட்டுவதானால் அவரையும் குற்றம் சாட்டுவதே பொருத்தமானது.அது போன்று இன்றைய ஆட்சியின் பிரதான பங்காளரான சம்பிக்க இலங்கையில்முஸ்லிம்களுக்கு எதிராக புத்தகம் எழுதி பேரின மக்களிடையே இனவாத நச்சு விதையை விதைத்தவர்களில்முதன்மையானவர்.அளுத்கமை கலவரத்தின் பிரதான சூத்திரதாரியும் அவரே.இன்றுஅவர்தான் முஸ்லிம்களின் நல்லாட்சியின் முக்கிய தளபதி.

இவ்வாறானவர்களை நம்பிய முஸ்லிம்கள்அவர்களுடன் கை கோர்த்துக்கொண்டு எங்களை எதிர்த்து பயணித்து கொண்டிருப்பது வேடிக்கையாகவுள்ளது.தற்போது முஸ்லிம்கள் தெளிவு பெற்று நாளாந்தம்எம்மை நோக்கி வருவதை அவதானிக்க முடிகிறது.மிக விரைவில் முஸ்லிம்களின் பங்களிப்புடன் ஆட்சி மாற்றத்தை கொண்டுவருவோம்.