Headlines
Loading...
முஸ்லிம் இனவாத கும்பல் ஜனாதிபதிக்கு எதிராக பிரசாரம் : தயாசிறி

முஸ்லிம் இனவாத கும்பல் ஜனாதிபதிக்கு எதிராக பிரசாரம் : தயாசிறி

வில்­பத்­துவில் முஸ்­லிம்­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு               தீர்­மா­னத்­தையும் ஜனா­தி­பதி எடுக்­க­வில்லை. ஆகையால் ஜனா­தி­ப­தியின் வர்த்­த­மா­னியை மீளப்­பெறமாட்டோம். எனினும் வில்­பத்து பிர­க­ட­னத்­தினை வைத்து ஜனா­தி­பதிக்கு எதி­ராக செயற்­படும் அர­சியல் கும்­ப­லொன்று உள்­ளது. இதன் பின்­ன­ணியில் முஸ்லிம் இன­வாத கும்­பலும் தொடர்­பு­பட்­டுள்­ளது. இவர்கள் யார் என்­பது எனக்கு ‍தெரியும்.இந்த மறைந்து தாக்­கும் கும்பல் விரைவில் வெளி­வரும். முது­கெ­லும்பு இருந்தால் மறைந்­தி­ருக்கும் அர­சியல் கும்பல் வெளி­வர வேண்டும் என விளை­யாட்டு துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர சவால் விடுத்தார்.

அத்­துடன் வில்­பத்து வர்த்­த­மா­னிக்கும் ரஷ்­யா­விற்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது. வில்­பத்­துவில் முஸ்­லிம்­களின் கிரா­மங்கள் எதுவும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. எனினும் ஒரு முஸ்லிம் இணை­யத்­த­ளத்தில் ஒரு இலட்சம் ஏக்கர் காணியை வில்­பத்து வன பிர­தே­ச­மாக ஜனா­தி­பதி பிர­க­ட­னப்­ப­டுத்­தி­ய­தா­க தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறி­ப்பிட்டார்.

நாரா­ஹேன்­பிட்­டியில் அமைந்­துள்ள அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

வில்­பத்து வன பிர­தே­சத்­திற்கு உரித்­தான 4 பகு­திகள் வன பாது­காப்பு பிர­தே­ச­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது. வன பாது­காப்பு கட்­டளை சட்­டத்தின் படி மாவில்லு, வெப்பல், கர­டிக்­குழி, மறிச்­சுக்­கட்டி, இளத்­தி­குளம், பெரி­ய­மு­றிப்பு என்­பவை ஒன்­றி­ணைந்து மாவில்லு வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்த வேண்­டி­யி­ருந்­தது. எனினும் இதனால் முஸ்­லிம்­க­ளுக்கு எந்­த­வொரு பாதிப்பும் இல்லை. 

இதனை வன­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டால் முஸ்­லிம்­களின் வணக்­கஸ்­த­ளங்­க­ளுக்கோ, வீடு­க­ளுக்கோ, குடி­யி­ருப்­பு­க­ளுக்கோ எந்­த­வொரு பாதிப்பும் இல்லை. மக்கள் குடி­யி­ருப்பு பகு­திகள் வன பாது­காப்பு பிர­தே­சங்­களுள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. 

யுத்­ததின் கார­ண­மாக இடம்­பெ­யர்ந்து புத்­த­ளத்தில் வாழும் முஸ்­லிம்கள் தொடர்பில் எனக்கு நன்கு தெரியும். வட­புல முஸ்­லிம்­களை மீள்­கு­டி­யேற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் ஜனா­தி­பதி தொடர்ந்தும் உள்ளார். அவ­ருக்கு வாக்­க­ளித்து ஆட்சி பீடம் ஏற்­றி­யது தமிழ், முஸ்­லிம்­க­ளாவர். 

எனினும் நாட்டின் வன பாது­காப்பு பகு­திகள் 25 சத­வீ­த­மாக குறை­வ­டைந்து வரு­கின்­றது. பேண்­தகு அபி­வி­ருத்­தியில் வன பாது­காப்பு பிர­தேசம் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்த­தாகும். எனினும் ஜனா­தி­ப­தியின் தீர்­மா­னங்களை சிலர் திரி­பு­ப­டுத்தி காட்ட முனை­கின்­றனர். 
 
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக முஸ்­லிம்­களை தூண்­டு­வ­தற்கு சிலர் திட்­ட­மிட்டு வரு­கின்­றனர். இன நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் நாம் ஈடு­பட்டு வரு­கின்றோம். எனினும் முஸ்லிம்களைத் தூண்டும் வகையில் சில செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது
 
ஜனா­தி­ப­திக்கு எதி­ராக பல கும்­பல்கள் தற்­போது உரு­வாகி வரு­கின்­றன.இந்த கும்பல் ஜனா­தி­ப­திக்கு எதி­ராக முஸ்­லிம்­க­ளையும் தமி­ழர்­க­ளையும் தூண்டி விடு­வதில் குறி­யாக உள்­ளது. வில்­பத்து வனத்தின் பாது­காப்பு பிர­தே­ச­மாக 600 ஏக்கர் காணி­களே பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­ப­திக்கு எதி­ராக முஸ்­லிம்­களை தூண்­டி­விடும் செயற்­பா­டு­களின் பின்­ன­ணியில் பெரும் அர­சியல் கும்பல் உள்­ளது. உள்ளே மறை­வாக இருந்து கொண்டு ஜனா­தி­பதிக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். எனினும் அந்த கும்பல் இன்னும் வெளியே வர­வில்லை. அந்த கும்பல் யார் என்­பது எனக்கு நன்கு தெரியும். முது­கெ­லும்பு இருந்தால் அந்த கும்பல் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டை நடத்த வேண்டும். 

எனினும் இதில் ஐக்­கிய தேசியக் கட்சி தொடர்­புப்­பட்­டுள்­ள­தாக நான் கூறவில்லை. சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமக்குரிய வேலைகளை செய்து வருகின்றன.  மேலும் வில்பத்து வர்த்தமானிக்கு ஜனாதிபதி ரஷ்யாவில் கைச்சாத்திட்டதாக ஊடகங்கள் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் வர்த்தமானி அறிவித்தலுக்கும்  ரஷ்யாவிற்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது. அவசரமான வர்த்தமானிகளில் இப்படி கைச்சாத்திடுவது வழக்கமாகும் என்றார்.