Headlines
Loading...
வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்துள்ளார்.
கடந்த காலங்களில் எவ்வித கொள்கைகளும் அன்றி பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளமையே தற்போது வேலையற்ற பட்டதாரிகளின் அதிகரிப்புக்கு காரணம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

திருகோணமலையில் நடைபெற்று வரும்’யொவுன்புர 2017’நிகழ்வில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எனவே நல்லாட்சியின் கீழ் சரியான கொள்கைகள்,வேலைத்திட்டங்களின் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

இளைஞர்,யுவதிகளுக்கான சிறந்த எதிர்காலத்தை கட்டி எழுப்பும் பொறுப்பை நல்லாட்சி ஏற்றக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.