ஒரு கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது

NEWS
0
ஒரு தொகை ​ஹெரோயின் போதைப் பொருளை நாட்டுக்கு கொண்டு வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று மாலை டுபாயில் இருந்து வந்த EK 648 என்ற விமானத்தில் குறித்த சந்தேகநபர் வந்துள்ளதுடன், அவருடைய பாதணிகளுக்கு அடியில் அவற்றை மறைத்து வைத்திருந்ததாக தெரிய வருகிறது.

01 கிலோவும் 156 கிராம் ஹெரோய்ன் போதைப் பொருள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி ஒரு கோடியே பத்து இலட்சம் ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top