Headlines
Loading...
வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலிக்க வேண்டும் : அமீர் அலி

வர்த்தமானி அறிவித்தலை மீள்பரிசீலிக்க வேண்டும் : அமீர் அலி

வில்பத்துக்காணிக்கு அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டுமென கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஓட்டமாவடி 02ம் வட்டாரக்கிளை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை கேட்போர் கூடத்தில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போது, அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு பிரதியமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,  வில்பத்துக் காணிக்கு ஜனாதிபதியினால் செய்யப்பட்டிருக்கின்ற வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக மீள்பரிசீலனை செய்யப்படவில்லை என்றால், நாங்களும் மீள்பரிசீலனை செய்ய வேண்டி வருமென்ற விடயத்தை ஜனாதிபதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தெளிவாகத் தெரிவித்திருக்கின்றது.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று சிறுபான்மைச்சமூகம் சொன்ன பொழுது நாங்கள் நல்லாட்சியைக் கொண்டு வர வேண்டுமென்று முதன் முதலில் களமிறங்கி அதில் வெற்றி கண்டவர்கள். ஆனால், தபால் வாக்களிப்புக்குப் பின்பு தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினர் சொன்னார்கள் மனச்சாட்சியின் படி வாக்களியுங்கள் என்று நாங்கள் தைரியமாக வெளியேறி இந்த அரசசைக்கொண்டு வருதற்கு முக்கிய ஊன்றுகோலாக அமைந்திருக்கின்றோம்.

பெருன்பான்மைச் சமூகங்களுக்கு சொல்லி உசுப்பேத்துவதற்காக நான் இங்கு இந்த விடயத்தைச் சொல்லவில்லை. வில்பத்துக்காணி விடயத்தில் இழுத்தடிப்புச்செய்து அல்லது நகர்த்தல் செய்தால் இதற்கு கடுமையான விலைவை அனுபவிக்க வேண்டி வருமென்ற எச்சரிக்கையை நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு சொல்லிக் கொள்ள வேண்டுமென்றார்.