Headlines
Loading...
ஏறாவூர் இரட்டைப் படுகொலை; விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ஏறாவூர் இரட்டைப் படுகொலை; விளக்கமறியல் மேலும் நீடிப்பு

ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரும் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேக நபர்களை ஏப்ரில் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியூமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஸ்வி உத்தரவிட்டார்.

ஏறாவூர் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான  நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்ரெம்பெர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர். சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வருகின்றனர்.

0 Comments: