Headlines
Loading...
சிலை வைக்க முயன்ற தேரருக்கு நீதிவான் கடும் எச்சரிக்கை

சிலை வைக்க முயன்ற தேரருக்கு நீதிவான் கடும் எச்சரிக்கை

நாச்சியாதீவில் முஸ்லிம்களின் காணியில் சிலை ஒன்றை வைக்க முற்பட்ட சர்ச்சைக்குரிய தேரருக்கு இன்று நீதிவான் கடும் எச்சரிக்கை விடுத்தார்.

இது தொடர்பான வழக்கு இன்று அநுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போதே பிரதேசத்தில் அமைதிக்கும் இன நல்லுறவுக்கும் பங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என சம்பந்தப்பட்ட தேரருக்கு நீதிவான் எச்சரிக்கை விடுத்தார்.

இதன் போது முஸ்லிம்கள் தரப்பில் சட்டத்தரணிகளான என்.எம்.சஹீத், ருஷ்தி ஹபீப் ஆகியோர் மன்றில் ஆஜராகினர். இவ் வழக்கு மே மாதம் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.