Headlines
Loading...
இலங்கை கடற்பரப்பில் பற்றியெரிந்த பனாமா கப்பல்

இலங்கை கடற்பரப்பில் பற்றியெரிந்த பனாமா கப்பல்

கொழும்புக்கு தெற்கே, பனாமா கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த சரக்குக் கப்பலொன்றில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு  இந்த தீ பரவல் சம்பவம் இடம்பெற்ற நிலையில் இன்று மாலை பாரிய போராட்டங்களுக்கு மத்தியில்  தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இந் நிலையில் கப்பலில் இருந்த பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் உயிராபத்துக்கள் ஏதும் இல்லாத நிலையில் தீ மேலும் பரவும் ஆபத்து உள்ளதா என்பதை ஆராய்ந்து வருவதாகவும்  கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் சமிந்த வலாகுலுகே தெரிவித்தார். 

இலங்கை கடற்படை கப்பல்களுக்கு மேலதிகமாக இந்திய கடற்படையினரும் கப்பல்கள் சகிதம் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் விமானப்படையில்  பெல் 212 ரக ஹெலிகப்டர்களின் உதவியும் தீயைக் கட்டுப்படுத்த உதவிகள் பெறப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

0 Comments: