Headlines
Loading...
அட்டாளைச்சேனையில் தனியார் காணியை சுவீகரித்த முக்கிய முஸ்லிம் அரசியல் புள்ளி

அட்டாளைச்சேனையில் தனியார் காணியை சுவீகரித்த முக்கிய முஸ்லிம் அரசியல் புள்ளி

காப்பக படம் - பாவங்காய் வீதி அட்டாளைச்சேனை

அட்டாளைச்சேனை பாவங்காய் வீதியில் உள்ள 05 ஏக்கர் காணியை தன்னுடையது எனச்சொல்லி அதற்குள் வாடிவீடு அமைத்து அரசியல் நடத்திய முக்கிய புள்ளி தொடர்பாக விரைவில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரவுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் அதிகாரத்திலிருந்த ஒருவர் குறித்த இடத்தை தனது சகோதரரின் பெயரில் களவுத்தனமாக உறுதி முடித்து குறித்த இடத்தில் வாடிஅமைத்திருந்ததாக குறித்த காணியுரிமையாளர் எமது சிலோன் முஸ்லிம் செய்தி்ப்பிரிவிற்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக குறிப்பிட்ட காணியுரிமையளார் இந்த நல்லாட்சியிலாவது நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.

இந்த விடயம் சம்பந்தமாக முன்னாள் அமைச்சரிடத்தில் அவர் அதிகாரத்தில் இருந்த பொழுது முறையிட்ட பொழுது அவர் இது குறித்து கரிசனை காட்டாமல் இருந்துள்ளதாகவும் காணியுரிமையாளர் குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் வழக்கு முடிவுற்ற பிறகு இதில் யார் யார் சம்பந்தப்பட்டார்கள் என்ன நடந்தது பற்றி ழுழுவிபரமும் வெளிச்சத்திற்கு வரவுள்ளது.