Headlines
Loading...
அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார் மகிந்த

அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்கிறார் மகிந்த


அரசாங்கத்தை கவிழ்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தெஹிவளை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பணியாளர்கள் தொழிலில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். விவசாயிகளுக்கான சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அரிசிக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாங்கத்தின் கீழ் இலங்கை மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அதிகபடியாக இன்னும் 2 பௌர்ணமி தினங்களுக்கே அரசாங்கம் நிலைத்திருக்கும் எனவும் மகித்த தெரிவித்தார்.