Headlines
Loading...
மாணிக்கமடுவில் வெசாக் கொண்டாட்டம்; 15 மேற்பட்ட பௌத்த பிக்குகள் பனை ஓதுகின்றனர்

மாணிக்கமடுவில் வெசாக் கொண்டாட்டம்; 15 மேற்பட்ட பௌத்த பிக்குகள் பனை ஓதுகின்றனர்



 இறக்காமம் மாணிக்கமடு பகுதியில் வைக்கப்பட்டிருக்கின்ற சிலைக்கு அருகாமையில் வெசாக் வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக எமது இறக்காமத்து செய்தியாளர் தெரிவித்தார். 15ற்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் அடங்களாக ஒரு சில இனவாத அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் இந்த வெசாக் கொண்டாட்டங்களை தடுப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த போதிலும் இறக்காமத்தை சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடைய அனுமதியின் பெயரில் இந்த வெசாக் கொண்டாட்டங்கள் இடம்பெறுவதற்காக வழிவகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறு இருந்தாலும் நீதிமன்ற உத்தரவு இங்கு எந்தவிதமான மத வழிபாடுகளையும் செய்யக் கூடாது என்பதுதான். ஆனாலும் இன்று முஸ்லிம் முக்கியஸ்தர் ஒருவருடைய உத்தரவின் பெயரிலே வெசாக் வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.