ஏமனில் கொலரா நோயால் 32 பேர் உயிரிழப்பு

NEWS


ஏமனில் கடந்த இரண்டு வாரங்களாக கொலரா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதால் இதுவரை 34 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 27ஆம் திகதி தொடக்கம் மே 7ஆம் திகதி வரை ஏமனின் 9 மாகாணங்களில் 2022 பேர் கொலரா நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஏமனில் ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவுதி தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் கள் இடம்பெற்று வருவதால் பெருமளவிலான வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டுள்ள நிலையில்,பல்லாயிரம் கணக்கானவர்கள் கொலராவினால் பாதிக்கப்பட்டு பரிதவிப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது.
6/grid1/Political
To Top