Headlines
Loading...
இந்திய ​ஹெலிகளால் 5 வீடுகளின் கூரைகள் சேதம்

இந்திய ​ஹெலிகளால் 5 வீடுகளின் கூரைகள் சேதம்




மு.இராமச்சந்திரன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின், மலையக விஜயத்தை முன்னிட்டு, இந்திய ஹெலிகொப்டர்கள் இரண்டு ஒத்திகைபார்த்து, ஹட்டன் டன்பார் விளையாட்டு மைதானத்தில் நேற்று (09) இறங்கியமையால், மைதானத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடுகளில், 5 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன என ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த இரண்டு ஹெலிகள், மைதானத்தில் தரையிறங்கும் போது, வீடுகளின் மேலாக மிகவும் தாழ்வாக பறந்தமையால், விசிறிகளிலிருந்து வெளியேறிய அதிக அழுத்தத்தைக் கொண்ட காற்றினால், குறிப்பிட்ட 5 வீடுகளின் கூரைகளும் சிறிய சேதத்துக்கு உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது.