Headlines
Loading...
இந்­திய பிர­த­மரின் வருகை : கொழும்பில் பாதைகள் மூடப்படுகின்றன

இந்­திய பிர­த­மரின் வருகை : கொழும்பில் பாதைகள் மூடப்படுகின்றன

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு விஜயம் செய்ய உள்ள நிலையில் கொழும்பு நகரில் விஷேட போக்­கு­வ­ரத்து திட்டம் ஒன்று அமுல்­ப­டுத்­தப்­பட உள்­ளது.  


நாளை மாலை 6 மணி முதல் குறிப்­பிட்ட நேரங்­களில் குறிப்­பிட்ட பகு­தி­களை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த விஷேட போக்கு வரத்தும் பாதை மூடும் நட­வ­டிக்­கை­களும் இடம்­பெறும் என பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அதன்­படி இந்­தியப் பிர­தமர் பய­ணிக்கும் பிர­தான வீதி­களும் அத­னுடன் இணையும் ஏனைய உள் வீதி­களும் இந்­திய பிர­தமர் மோடி பய­ணித்து முடியும் வரை முழு­மை­யாக மூடப்­படும் என்று அவர் சுட்­டிக்­காட்­டினார்.  நாளை மாலை 6.00 மணிக்கு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை வந்­த­டையும் மோடி, அங்­கி­ருந்து அதி­வேக பாதை ஊடாக கொழும்பு நக­ருக்குள் பிர­வே­சிக்க உள்ளார். அதன்­படி  மூடப்­ப­ட­வுள்ள வீதி­களின் விப­ரங்கள் வரு­மாறு, 
மே மாதம் 11ம் திகதி 

பி.ப. 6.15 மணிக்கு - கட்­டு­நா­யக்க அதி­வேக வீதி, பேலி­ய­கொட, பொரளை பேஸ்லைன் வீதி, டி.எஸ் கல்­லூரி போக்­கு­வ­ரத்து ஒளி சமிக்ஞை சந்தி, கிரீன் பார்க், தாமரைத் தடாகம், பொது­நூ­லக சுற்­று­வட்டம், ஆனந்த குமா­ர­சு­வாமி மாவத்தை, மல் வீதி, பித்­தளை சந்தி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, கங்­கா­ராம எல்லை வரை பொதுப் போக்கு வரத்து தொடர்பில் தடை செய்யப்­ப­ட­வுள்­ளது. 

பி.ப. 07.15 மணிக்கு - கங்­கா­ராம எல்­லை­யி­லி­ருந்து நவம் மாவத்தை, உத்­த­ரா­னந்த மாவத்தை, முகம்­மது மாக்கான் மாக்கார் மாவத்தை, காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரையில் போக்கு வரத்து தடை செய்­யப்ப­ட­வுள்­ளது.

பி.ப. 08.20 மணிக்கு - தாஜ் சமுத்ரா ஹோட்­டலில் இருந்து காலி முகத்­திடல் வீதி, ரவுண்­டா­னாவில், என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், ஜனா­தி­பதி மாளிகை வரை­யிலும் பி.ப. 10.30 மணிக்கு - ஜனா­தி­பதி மாளி­கை­யி­லி­ருந்து என்.எஸ்.ஏ சுற்­று­வட்டம், காலி முகத்­திடல் வீதி ஊடாக தாஜ் சமுத்ரா ஹோட்டல் வரை­யிலும் வீதிகள் முழு­மை­யாக மூடப்­ப­ட­வுள்­ளன.
மே மாதம் 12ம் திகதி 

மு.ப. 09.05 மணிக்கு - தாஜ் சமுத்ரா ஹோட்டல், காலி முகத்­திடல் சுற்­று­வட்டம், கொள்­ளுப்­பிட்டி சந்தி, லிபர்ட்டி சந்தி, பித்­தளை சந்தி, செஞ்­சி­லுவை சந்தி, பொது நூலக சுற்­று­வட்டம், க்ளாஸ்­ஹவுஸ் சந்தி, நந்தா மோட்டர்ஸ், சுதந்­தி­ர­ச­துக்க சுற்­று­வட்டம், சுதந்­திர மாவத்தை, பௌத்­தா­லோக மாவத்தை, மெட்லான்ட் பிளேஸ் சந்தி, பௌத்­தா­லோக மாவத்தை ஊடாக பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­டபம் வரை வீதி மூடப்­ப­ட­வுள்­ளது. 

மு.ப. 10.50 மணிக்கு - பண்­டா­ர­நா­யக்க ஞாப­கார்த்த மாநாட்டு மண்­டபம், பௌத்­தா­லோக மாவத்தை, ஜாவத்தை சந்­தியால் இட­து­பக்கம் திரும்பி, ஜாவத்தை வீதி, கெப்­பட்­டி­பொல சந்­தியால் வலது பக்கம் திரும்பி கெப்­பட்­டி­பொல மாவத்தை ஊடாக பொலிஸ் மைதானம் வரை வீதி மூடப்­ப­ட­வுள்­ளது.

மேலே கூறப்­பட்ட வீதிகள் ஊடாக இந்­தியப் பிர­தமர் பய­ணிக்கும் அனைத்து சந்­தர்ப்­பங்­க­ளிலும் அந்த வீதி­களும் அத­னுடன் சம்­பந்­தப்­பட்ட உள்­ளக வீதி­களும் மூடப்­படும் அதே­வேளை குறித்த வீதி­களின் ஒரு பக்க வழியில் பய­ணிப்­ப­தற்கும் அனு­ம­திக்­கப்­பட மாட்­டாது என்று பொலிஸ் பேச்­சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி அறி­வித்தார்.

இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி கட்டுநாயக்க அதிவேக வீதியூடாக களனி பாலம் நுழைவினால் பேஸ்லைன் வீதிக்கு வரும் வரை, பிற்பகல் 5.45 மணி முதல் கட்டுநாயக்க அதிவேகப் பாதையின் கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கிய வீதி மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

MFM.Fazeer