புடைவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

NEWS
0 minute read
 
 
 
திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குற்பட்ட புடவைக்கட்டு முஸ்லிம் வித்தியாலய மாணவர்களும் பெற்றோர்களும் தங்களுக்கு நிரந்தர ஆசிரியர்களை வழங்குமாறு கோரி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

253 மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப் பாடசாலையில் 07 ஆசிரியர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் .09 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் பல தடவைகள் கல்வி உயரதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லையெனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.
To Top