Headlines
Loading...
"பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம்" - ஈரான் எச்சரிக்கை!!!

"பாகிஸ்தானில் புகுந்து தாக்குதல் நடத்துவோம்" - ஈரான் எச்சரிக்கை!!!



'தீவிரவாதத்தை கட்டுப்படுத்தாதபட்சத்தில் பாகிஸ்தானின் மீது தாக்குதல் நடத்துவதாக ஈரான் எச்சரித்துள்ளது. பாகிஸ்தானில்  நிலைகொண்டுள்ள தீவிரவாதிகள் ஈரானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில 10 ஈரான் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை பாகிஸ்தானில் இயங்கும் ஜெய்ஸ்-அல்- அடில் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஈரான் அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள ஈரானிய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியொருவர், பாகிஸ்தான் எல்லைப்பகுதி தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழ்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசாங்கம் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை ஒழிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.