Headlines
Loading...
பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் நடாத்திய டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வு

பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் நடாத்திய டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வு




கிழக்கு மாகாண கல்வி அமைச்சு, பாலர் பாடசாலைக் கல்விப் பணியகம் நடாத்திய டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வு கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் 2017.05.09ஆந்திகதி-திங்கட்கிழமை நடைபெற்றது. 

இவ்விழிப்பூட்டும் நடைபேரணியானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையிலிருந்து ஆரம்பமாகி கோறளைப்பற்று பிரதேச சபை வரை சென்றது.  

இவ்டெங்கு டெங்கு ஒழிப்பு விழிப்பூட்டல் நடைபேரணி நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயுதபாணி அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பொறியியலாளர் ஷிப்லி பாறுக், ஜீ. கிருஸ்ணப்பிள்ளை, இ. நித்தியானந்தம், கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகள் கல்விப் பணிப்பாளர் பொன் செல்வநாயகம் மற்றும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மேலும், பிரதேச சபைகளின் செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களின் பொறுப்பதிகாரிகள், முன்பள்ளி பாலர் பாடசாலைகளின் ஆசிரியைகள் மற்றும் பொலிசார் ஆகியோரும் கலந்துகொண்டனர்.