Headlines
Loading...
சவூதி இலவச பேரீச்சம் பழத்துக்கான வரியை அந்நாடே செலுத்தியது

சவூதி இலவச பேரீச்சம் பழத்துக்கான வரியை அந்நாடே செலுத்தியது











சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து ரம­ழா­னுக்­காக இறக்­கு­மதி செய்­யப்­படும் பேரீச்சம் பழத்­திற்கு அர­சாங்கம் எவ்­வித புதிய வரியும் அற­வி­ட­வில்லை. எதிர்­வரும் புனித ரம­ழா­னுக்­காக சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இலவச பேரீச்சம் பழத்­திற்­கான அனைத்து வரி­க­ளையும் சவூதி அர­சாங்­கமே செலுத்­தி­யுள்­ளது என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் தெரி­வித்தார்.

அர­சாங்கம் பேரீச்சம் பழத்­திற்­காக இறக்­கு­மதி வரியை அதி­க­ரித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்டு வரும் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் வின­விய போதே அமைச்சர் ஹலீம் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

கடந்த காலங்­களில் பேரீச்சம் பழம் ஒரு கிலோ­வுக்­கான வரி 130 ரூபா­வி­லி­ருந்து 60 ரூபா­வாக எமது அர­சாங்­கத்தின் காலத்­திலே குறைக்­கப்­பட்­டது. அத்­தி­யா­வ­சியப் பொருட்­க­ளுக்­காக மேற்­கொள்­ளப்­பட்ட வரி திருத்­தத்­திற்கு அமைய இக்­கு­றைப்பு மேற்­கொள்­ளப்­பட்­டது.

புனித ரம­ழா­னுக்­காக சவூதி அரே­பியா இவ்­வ­ருடம் அன்­ப­ளிப்­பாக 150 தொன் பேரீச்சம் பழங்­களை அனுப்பி வைத்­துள்­ளது. இதற்­கான இறக்­கு­மதி வரி உட்­பட அனைத்து வரி­க­ளையும் சவூதி அர­சாங்­கமே செலுத்­தி­யுள்­ளது. கடந்த வருடம் சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு 200 தொன் பேரீச்சம் பழங்கள் அன்­ப­ளிப்­பாக வழங்­கப்­பட்­டன. இவ்­வ­ருடம் 50 தொன் குறை­வா­கவே வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் ஒரு தொகை பேரீச்சம் பழங்­களை சவூ­தி­யி­லி­ருந்து அன்­ப­ளிப்­பாகப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு பேச்­சு­வார்த்தை நடாத்தி வரு­கிறோம். கடந்த காலங்­களில் பேரீச்சம் பழத்­துக்­கான இறக்­கு­மதி வரியை அதா­வது நோன்­புக்­காக அனுப்பி வைக்­கப்­படும் பேரீச்சம் பழத்­துக்­கான வரி அர­சாங்கம் எமக்கு திறை­சே­ரி­யூ­டாக செலுத்தி வந்­தது.

சவூதி அரே­பி­யா­வி­லிந்து 150 தொன் பேரீச்சம் பழங்கள் இலங்கை வந்­த­டைந்­துள்­ளன. சவூதி அதி­கா­ரி­களால் அது உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எம்­மிடம் கைய­ளிக்­கப்­ப­ட­வில்லை என்­றாலும் பேரீச்சம் பழங்­களை ரம­ழா­னுக்கு முன்பு விநி­யோ­கிக்­கப்­பட வேண்டும் என்ற அடிப்­ப­டையில் கொழும்பைச் சேர்ந்த 10 பள்­ளி­வா­சல்­க­ளுக்கு பேரீச்சம் பழங்­கள் ஏற்­க­னவே பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன.

நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. நோன்பு ஆரம்­ப­மா­வ­தற்கு முன்பு அவை பகிர்ந்­த­ளிக்­கப்­படும். பேரீச்சம் பழத்துக்கு அரசாங்கம் மேலதிக வரி விதித்துள்ளது என்று தவறான செய்தியே பரப்பப்பட்டு வருகிறது.

நோன்புக்கான பேரீச்சம் பழத்துக்கான வரியை சவூதி அரசாங்கம் செலுத்தியுள்ளது. எனவே மக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ARA.Fareel