Headlines
Loading...
சம்மாந்துறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

சம்மாந்துறையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை



அம்பாறை - சம்மாந்துறை பிரதேசத்தில் சிறுவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வீட்டின் கூரையில் துணியொன்றை கட்டி அதன் உதவியில் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர் 9 வயதான சிறுவன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சடலம் தற்போது சம்மாந்துறை மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.