Headlines
Loading...
நாளை மாணிக்கமடுவில் வெசாக் கொண்டாட்டம்;களமிறங்குகிறது சிங்களே பொதுபலசேனா அமைப்புகள்

நாளை மாணிக்கமடுவில் வெசாக் கொண்டாட்டம்;களமிறங்குகிறது சிங்களே பொதுபலசேனா அமைப்புகள்



இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பகுதியில் இருக்கின்ற புத்தர் சிலைக்கு அருகில் நாளை வெசாக் கொண்டாட்டங்களை நடாத்த இருப்பதாக சிங்கள பேரினவாத அமைப்பொன்று அறிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பான சுவரொட்டிகள்  சிங்கள பகுதிகளில் ஒட்டப்பட்டிருக்கின்றது. அதுமாத்திரமின்றி சமூக வலைதளங்களில் இது தொடர்பான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது. மாயக்கல்லி பிரதேசத்தில் விகாரை அமைப்பதில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள் நிலமை  அனைவருக்கும் தெரியும்.

ஏற்கனவே நாங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது போன்று மாயக்கல்லி மாணிக்கமடு பகுதியில் இப்படியான ஒரு விசாக் கொண்டாட்டத்தினை நடாத்துவதாக அறிவித்து இருக்கின்ற இந்த சிங்கள அமைப்புக்கள் முஸ்லிம் பிரதேசத்தில் அடாத்தாக குடியமர்த்தப்படுகின்ற சிங்கள மக்கள் முஸ்லிம் பிரதேசத்தில் அடாத்தாக கட்டப்படுகின்ற விகாரைகள் போன்ற நடவடிக்கைகள் காரணமாக முஸ்லிம்கள் அசௌகரியத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதுமாத்திரமின்றி முஸ்லிம்கள் பெரும்வாரியாக இதனை எதிர்த்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் இந்த பிரதேசத்தில் வெசாக் கொண்டாடுவது முஸ்லிம்களை கேள்விக்குள் ஆழ்த்தி இருக்கின்றது.