Headlines
Loading...
பிலியந்தளை துப்பாக்கிச் சூடு: DIG லதீபிடம் அறிக்கை கோரல்

பிலியந்தளை துப்பாக்கிச் சூடு: DIG லதீபிடம் அறிக்கை கோரல்


பிலியந்தலையில் நேற்று (09) இரவு சுற்றிவளைப்புக்காக சென்ற பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரிகள் குழு மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில், சட்டம் ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளார்.
சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றை மூன்று நாட்களுக்குள் தனக்கு வழங்குமாறும் அமைச்சர் சாகல ரத்நாயக்க பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளார்.
அதன்படி குறித்த அறிக்கையை தயார் செய்வதற்காக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம்.ஆர். லதீபை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர நியமித்துள்ளார்