திருகோணமலை பெரியகடை ஜூம்ஆ பள்ளிவாசல் இன்று அதிகாலை இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் அன்வர் குறிப்பிட்டார்.
அண்மையில் தோப்புர் பகுதியிலும் அசம்பாவித சம்பவம் இடம்பெ்ற்றது, வெள்ள அனர்த்தம் இடம்பெற்ற போது எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறாத நிலையில் அனர்த்த நிலை முடிந்த பிறகு மீள இனவாதம் தலைதுாக்கியுள்ளது.
குறித்த சம்பவத்தின் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருவதாக மேலும் குறிப்பிட்டார்.
வெள்ள அனர்த்தம் முடிந்தது; பள்ளிவாசல் உடைப்பு அரம்பம் - பெரியகடை பள்ளியுடைப்பு
June 03, 2017
0 minute read
0
Share to other apps