பிரதமரின் தேக சுகத்திற்கு முஸ்லிம்கள் பிரார்த்தனை

NEWS
0


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தபால்தபால் சேவைகள் முஸ்லிம் காலாசார அமைச்சு மற்றும் முஸ்லிம் கலாசார திணைக்களம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்திற்காக துஆப் பிரார்த்தனையும் மற்றும் இப்தார் நிகழ்வும் நேற்று முன்தினம் (27) புதன்கிழமை மருதானை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் ஏற்பட்டிலும் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் (நளீமி) ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இந் நிகழ்வில்மௌலவி அல்- காரி பைஸலினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உடல் ஆரோக்கியத்திற்காகவும் மற்றும் நாட்டு நலனுக்காவும் சிங்கள மொழியில் துஆப் பிரார்த்தனை செய்யப்பட்டது.

நிகழ்வில்அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்ஏ.எச்.எம்.பௌஸிபாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான்இம்ரான் மஹ்ரூப்அப்துல்லாஹ் மஹ்ரூப்காதர் மஸ்தான்தபால் மற்றும் முஸ்லிம் கலாசார அமைச்சின் செயலாளர் ஹப்புஆராய்ச்சிமுஸ்லிம் கலாசார திணைக்கள அதிகாரிகள்அரச உயர் மட்ட அதிகாரிகள்மற்றும் ஏராளமான பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)
6/grid1/Political
To Top