(அஷ்ரப் ஏ சமத்)
கொழும்பு மாவட்டத்தின் பண்ணிப்பிட்டிய பிரதேசத்தில் 60,000 இலட்சம் ருபா செலவில் 500 வீடுகள் கொண்ட தொடா் மாடி வீடுகளுக்கான நிர்மாணப்பணிகள் இன்று (18) பிரதம மந்திரி ரணில்விக்கிரமசிங்க மற்றும் மேல்மாகாண மாநகரங்கள் அமைச்சா் சம்பிக்க ரணவக்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இவ் வீடமைப்புத்திட்டத்திற்காக ”வியன்புர” பெயரிட்டு தணியாா்.அரச நிறுவனங்களில் சேவைபுரியும் ஊழியா்களுக்காக இவ் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிகக்படுகின்றது. இத் திட்த்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுக்கின்றது. இவ் வைபத்தில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, மேல்மாகாண முதலமைச்சா் இசுரு தேசப்பிரியுவும் கலந்து கொண்டாா்.